பழனியில் மதக் கலவரத்தை தூண்டும் விதமாக சமூக வலைதளத்தில் போலியான தகவலை பரப்பிய நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி மதினா நகரை சேர்ந்தவர் சாதிக் அலி. இவர் நேற்று முன்தினம் அவரது செல்போனில் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் ஒன்று வைத்திருந்தார். தமிழ்நாடு காவல்துறை எச்சரிக்கை என்ற பெயரில் வைக்கப்பட்டிருந்த அந்த லெட்டர்பேடில், யாராவது உங்கள் வீட்டின் வாசலுக்கு வந்து மருத்துவக் கல்லூரியில் இருந்து வருகிறோம். உங்களுக்கு இலவசமாக சுகர் டெஸ்ட் எடுக்கிறோம் என கூறினால் அவர்களை விரட்டி அனுப்புங்கள்.
அல்லது காவல்துறையிடம் புகார் அளியுங்கள் என்றும், அவர்கள் ஹிந்து, ஆர்எஸ்எஸ் தீவிரவாத அமைப்பினால் எய்ட்ஸ் வைரஸை பரப்புவதற்காக அனுப்பப்பட்டவர்கள். எனவே, இதை பார்த்தவர்கள் தங்கள் நண்பர்களுக்கும் இதை பகிர்ந்து கொள்ளுங்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், அந்த லெட்டர் பேடில் இப்படிக்கு தமிழ்நாடு காவல்துறை என சீல் வைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்த தகவலறிந்த காவல்துறையினர் சாதிக் அலியை பிடித்து விசாரணை செய்தனர்.
தொடர்ந்து, தமிழ்நாடு காவல்துறை அறிவிப்பு போல போலியான லெட்டர்பேடு வைத்த சாதிக்அலி மீது மத வன்முறையை தூண்டும் வகையில் சமூக வலைதளத்தில் தகவல் பரப்பியதாக வழக்குப்பதிவு செய்த போலீசார் சாதிக் அலியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும். இது போன்ற வன்முறையை தூண்டும் வகையில் உள்நோக்கத்துடன் பதிவு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் எச்சரித்தனர். இச்சம்பவம் பழனி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் திரையுலகில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் மிகப்பெரிய வெற்றிப் படமாக டிராகன் படம் உருவாகியுள்ளது,அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன்…
காசு மழையில் டிராகன் கடந்த மாதம் பிப்ரவரி 21 ஆம் தேதி அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில்…
டி.ராஜேந்திரனின் பரிதாப நிலை.! தமிழ் சினிமாவில் நடிகர்,இயக்குநர்,இசையமைப்பாளர்,தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர்,விநியோகஸ்தர்,அரசியல் வாதி என பல்வேறு திறமைகளை கையில் வைத்திருப்பவர் டி.ராஜேந்திரர். இதையும்…
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ராம் சந்தர் (வயது 35). இவர் கோவையில் தங்கி தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார்.…
பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்.! நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை…
நடிகர் விஜய் தற்போது சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தனது கடைசிபடம் ஜனநாயகன் தான் என கூறியுள்ள நிலையில் தமிழக…
This website uses cookies.