தாய் இல்லாமல் பாட்டியிடம் வளர்ந்த சிறுமி: பல வருடங்களாக சீரழித்த சித்தப்பா: உடந்தையாய் இருந்த தந்தை….!!

சிதம்பரம் அருகே பாட்டியின் பாதுகாப்பில் வளர்ந்து வந்த 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமியின் சித்தப்பாவும், உடந்தையாக இருந்த அப்பாவும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிதம்பரத்தை அடுத்த புதுக்குப்பத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரின் மனைவி இறந்து விட்ட நிலையில், 13 வயது மகளும், 14 வயது மகனும் பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து வருகின்றனர்.

சிறுமியின் சித்தப்பா ஆனந்த ஜோதி, சிறுமியை அவ்வப்போது பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாக தெரிகிறது. இதை சிறுமி தனது தந்தையிடம் தெரிவித்தும், அவர் கண்டு கொள்ளாமல் இருந்திருக்கிறார்.

இதுகுறித்து சிறுமியின் அண்ணனுக்கு தெரியவந்து, அவர் சென்னையில் உள்ள உறவினரான ஜெயப்பிரதாவுக்கு தகவல் கொடுத்துள்ளார். அவர் அளித்த புகாரின் பேரில் சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில், சிறுமியை அவருடைய சித்தப்பா தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரையும், சிறுமியின் தந்தையையும் போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவத்தில் உடந்தையாக இருந்ததாக உறவினர்கள் ரேவதி, பிரேமா, வனஜா ஆகிய மூவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Sudha

Recent Posts

முரட்டு கம்பேக்கா அமைந்ததா ‘வீர தீர சூரன்’..சூர ஆட்டம் காட்டினாரா விக்ரம்..படத்தின் விமர்சனம்.!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சியான் விக்ரம் நடித்துள்ள "வீர தீர சூரன் பாகம் 2" திரைப்படம் நீண்ட எதிர்பார்ப்புக்கு…

17 minutes ago

மோசடியில் செல்வப்பெருந்தகை அண்ணன் மகன்? திமுகவுக்கு தெரியாமலா? அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு!

தூய்மைப் பணியாளர்களைத் தொழில் முனைவோர் ஆக்குகிறோம் என்ற பெயரில் மாபெரும் ஊழலை செல்வப்பெருந்தகை அரங்கேற்றியிருப்பதாக அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். சென்னை:…

31 minutes ago

நழுவிய செந்தில் பாலாஜி.. காத்திருக்கும் ED.. பாஜக செக்!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்குகளை சேர்த்து விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.…

1 hour ago

யாரும் இத மட்டும் பண்ணிராதீங்க..மனோஜ் இறந்ததற்கு காரணம் வேற..தம்பி ராமையா உருக்கம்.!

தம்பி ராமையாவின் உருக்கமான கருத்து தமிழ் திரைப்பட உலகில் தனித்துவமான பணியைச் செய்து வந்த நடிகரும்,இயக்குநருமான மனோஜ் பாரதிராஜா,திடீர் மரணமடைந்த…

1 hour ago

கலங்கி நின்ற விவசாயி.. கூண்டோடு வந்த வனத்துறை.. கோவையில் தொடரும் சிறுத்தை அச்சம்!

கோவையின் மதுக்கரை அடுத்த பகுதியில் ஆட்டைக் கொன்ற சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கோயம்புத்தூர்: கோவை…

2 hours ago

வருங்கால CM புஸ்ஸி ஆனந்த்.. கைவிரித்த ECR சரவணன்.. நடந்தது என்ன?

’வருங்கால CM’ என தவெக பொதுச் செயலாளர் பெயரைக் குறிப்பிட்டு ஒட்டப்பட்டுள்ள போஸ்டருக்கு புஸ்ஸி ஆனந்த், ECR சரவணன் விளக்கம்…

3 hours ago

This website uses cookies.