சிதம்பரம் அருகே பாட்டியின் பாதுகாப்பில் வளர்ந்து வந்த 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமியின் சித்தப்பாவும், உடந்தையாக இருந்த அப்பாவும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிதம்பரத்தை அடுத்த புதுக்குப்பத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரின் மனைவி இறந்து விட்ட நிலையில், 13 வயது மகளும், 14 வயது மகனும் பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து வருகின்றனர்.
சிறுமியின் சித்தப்பா ஆனந்த ஜோதி, சிறுமியை அவ்வப்போது பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாக தெரிகிறது. இதை சிறுமி தனது தந்தையிடம் தெரிவித்தும், அவர் கண்டு கொள்ளாமல் இருந்திருக்கிறார்.
இதுகுறித்து சிறுமியின் அண்ணனுக்கு தெரியவந்து, அவர் சென்னையில் உள்ள உறவினரான ஜெயப்பிரதாவுக்கு தகவல் கொடுத்துள்ளார். அவர் அளித்த புகாரின் பேரில் சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில், சிறுமியை அவருடைய சித்தப்பா தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரையும், சிறுமியின் தந்தையையும் போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவத்தில் உடந்தையாக இருந்ததாக உறவினர்கள் ரேவதி, பிரேமா, வனஜா ஆகிய மூவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சியான் விக்ரம் நடித்துள்ள "வீர தீர சூரன் பாகம் 2" திரைப்படம் நீண்ட எதிர்பார்ப்புக்கு…
தூய்மைப் பணியாளர்களைத் தொழில் முனைவோர் ஆக்குகிறோம் என்ற பெயரில் மாபெரும் ஊழலை செல்வப்பெருந்தகை அரங்கேற்றியிருப்பதாக அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். சென்னை:…
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்குகளை சேர்த்து விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.…
தம்பி ராமையாவின் உருக்கமான கருத்து தமிழ் திரைப்பட உலகில் தனித்துவமான பணியைச் செய்து வந்த நடிகரும்,இயக்குநருமான மனோஜ் பாரதிராஜா,திடீர் மரணமடைந்த…
கோவையின் மதுக்கரை அடுத்த பகுதியில் ஆட்டைக் கொன்ற சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கோயம்புத்தூர்: கோவை…
’வருங்கால CM’ என தவெக பொதுச் செயலாளர் பெயரைக் குறிப்பிட்டு ஒட்டப்பட்டுள்ள போஸ்டருக்கு புஸ்ஸி ஆனந்த், ECR சரவணன் விளக்கம்…
This website uses cookies.