சிதம்பரம் அருகே பாட்டியின் பாதுகாப்பில் வளர்ந்து வந்த 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமியின் சித்தப்பாவும், உடந்தையாக இருந்த அப்பாவும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிதம்பரத்தை அடுத்த புதுக்குப்பத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரின் மனைவி இறந்து விட்ட நிலையில், 13 வயது மகளும், 14 வயது மகனும் பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து வருகின்றனர்.
சிறுமியின் சித்தப்பா ஆனந்த ஜோதி, சிறுமியை அவ்வப்போது பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாக தெரிகிறது. இதை சிறுமி தனது தந்தையிடம் தெரிவித்தும், அவர் கண்டு கொள்ளாமல் இருந்திருக்கிறார்.
இதுகுறித்து சிறுமியின் அண்ணனுக்கு தெரியவந்து, அவர் சென்னையில் உள்ள உறவினரான ஜெயப்பிரதாவுக்கு தகவல் கொடுத்துள்ளார். அவர் அளித்த புகாரின் பேரில் சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில், சிறுமியை அவருடைய சித்தப்பா தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரையும், சிறுமியின் தந்தையையும் போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவத்தில் உடந்தையாக இருந்ததாக உறவினர்கள் ரேவதி, பிரேமா, வனஜா ஆகிய மூவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.