திருப்பத்தூர் அருகே சொத்து தகராறு தந்தையை கிரிக்கெட் மட்டையால் அடித்து கீழே தள்ளும் மகன் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த ஜங்கலாபுரம் பகுதியை சேர்ந்தவர் அப்பாவு 82 வயதான இவர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் இவர் தனது சொத்துக்களை இரு மகன்களுக்கு சரி சமமாக பிரித்துக் கொடுத்த நிலையில், மேலும் அவரது மனைவியின் பெயரில் உள்ள சொத்துக்களை தனக்கு வேண்டும் எனக் கூறி மூத்த மகன் மார்க்கபந்தீஸ்வரன் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தனது தந்தைக்கு தெரியாமல் தாயாரை அழைத்து சென்று தனது பெயரில் சொத்துக்களை பதிவு செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
தனது மனைவி பெயர் உள்ள சொத்துக்களை தனக்கு தெரியாமல் பத்திர பதிவு செய்து கொண்ட மூத்த மகனை தட்டி கேட்டதால் 82 வயது முதியவர் எனவும் பாராமல் தனது சொந்த தந்தையை கிரிக்கெட் மட்டையால் அடித்து கீழே தள்ளி கொலைவெறி செயலில் ஈடுபட்டுள்ளார். மார்க்கபந்தீஸ்வரன் இதில், எலும்பு முறிவு மற்றும் பலத்த காயம் அடைந்த முதியவர் அப்பாவுவை நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இது குறித்து முதியவர் அப்பாவு நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் மார்க்கவந்தீஸ்வரர் உள்ளிட்ட நான்கு பேரின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.