தமிழகம்

லாட்ஜ் அறையில் நிர்வாணமாக கிடந்த ஆண் சடலம்.. ஓட்டல் பெண் ஊழியரின் திடுக்கிடும் வாக்குமூலம்!

சென்னை தி.நகர் லாட்ஜில் நிர்வாண நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்டது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை: சென்னை நுங்கம்பாக்கம், குமாரப்பா தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ்பாபு (42). இவர் அண்ணா நகரில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில், இவர் கடந்த டிசம்பர் 8ஆம் தேதி காலை 11 மணி அளவில் ஐஸ்வர்யா என்ற பெண்ணுடன் தியாகராய நகரில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கி உள்ளார்.

பின்னர் அவர்கள் அங்கு உல்லாசமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, அன்று இரவு 7.30 மணியளவில் ஐஸ்வர்யா மட்டும் தனியாக புறப்பட்டு அங்கிருந்து சென்று உள்ளார். இந்த நிலையில், ஓட்டலில் புக் செய்த நேரம் முடிந்துவிட்டதால், டிசம்பர் 9ஆம் தேதி பிற்பகல் 2.30 மணியளவில் லாட்ஜ் ஊழியர்கள் அறையைக் காலி செய்யச் சொல்வதற்காக சென்று உள்ளனர்.

அப்போது, சுரேஷ் பாபு தங்கியிருந்த அறைக் கதவை ஊழியர்கள் தட்டி உள்ளனர். ஆனால், நீண்ட நேரமாகியும் அறை திறக்காததால் விடுதியில் உள்ள மற்றொரு சாவி மூலம் அறையைத் திறந்து பார்த்து உள்ளனர். அப்போது, சுரேஷ் பாபு அறையில் உள்ள கட்டிலில், ஆடைகள் எதுவும் இல்லாமல் நிர்வாண நிலையில் சடலமாகக் கிடந்து உள்ளார்.

இதையும் படிங்க: 4வது கணவரைத் தேடிய பிரியா.. வசமாக சிக்கிய விவசாயி.. லட்சக்கணக்கில் மோசடி!

பின்னர் இந்தச் சம்பவம் குறித்து உடனடியாக பாண்டிபஜார் போலீசாருக்கு லாட்ஜ் ஊழியர்கள் தகவல் அளித்து உள்ளனர். இதன் பேரில் வந்த பாண்டிபஜார் போலீசார், உயிரிழந்த சுரேஷ் பாபுவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கே.கே.நகர் ESI மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, சுரேஷ் பாபு உடன் தங்கி இருந்த ஐஸ்வர்யாவைப் பிடித்து விசாரித்தனர். இதில், குடும்ப வறுமை காரணமாக கடந்த 20 நாட்களுக்கு முன்பு தான் சுரேஷ் பாபு வேலை செய்யும் ஓட்டலில் பணிப்பெண்ணாக ஐஸ்வர்யா வேலைக்கு சேர்ந்து உள்ளார்.

இந்த நிலையில், சுரேஷ்பாபு அவரிடம் தனியாக பேச வேண்டும் எனக் கூறி விடுதிக்கு அழைத்துச் சென்றது மட்டுமல்லாமல், அவரது பாலியல் தேவைக்கு பயன்படுத்தி உள்ளார். மாலை இருவரும் பிரியாணி சாப்பிட்டுவிட்டு, அதன்பின் இரவு 7.30 மணிக்கு விடுதியில் இருந்து தான் புறப்பட்டதாகக் ஐஸ்வர்யா கூறியுள்ளார். மேலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Hariharasudhan R

Recent Posts

நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!

நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…

12 hours ago

பிளாக்கில் டிக்கெட் விற்பவர்களுக்கு முதல்வர் கனவு.. விஜய்யை மறைமுமாக சாடிய அமைச்சர்!

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…

12 hours ago

கஞ்சா வைத்திருந்த பிரபல சினிமா இயக்குநர்கள்..வளைத்து வைளத்து கைது செய்யும் போலீசார்!

போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…

13 hours ago

வெற்றிமாறன் மேல் உள்ள பயத்தால் சூர்யா எடுத்த திடீர் முடிவு? அப்போ வாடிவாசலோட நிலைமை?

இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…

13 hours ago

அடுத்தவ புருஷனை பங்கு போட்டது தப்புதான்.. ஆனா பாலு மகேந்திரா எனக்கு எல்லாமே கொடுத்தாரு ; நடிகை ஓபன்!

நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…

14 hours ago

ஜெயிலரை ஓவர் டேக் செய்யப்போகும் குட்  பேட் அக்லி! விரைவில் ஒரு தரமான சம்பவம்?

தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…

14 hours ago

This website uses cookies.