தமிழகம்

லாட்ஜ் அறையில் நிர்வாணமாக கிடந்த ஆண் சடலம்.. ஓட்டல் பெண் ஊழியரின் திடுக்கிடும் வாக்குமூலம்!

சென்னை தி.நகர் லாட்ஜில் நிர்வாண நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்டது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை: சென்னை நுங்கம்பாக்கம், குமாரப்பா தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ்பாபு (42). இவர் அண்ணா நகரில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில், இவர் கடந்த டிசம்பர் 8ஆம் தேதி காலை 11 மணி அளவில் ஐஸ்வர்யா என்ற பெண்ணுடன் தியாகராய நகரில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கி உள்ளார்.

பின்னர் அவர்கள் அங்கு உல்லாசமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, அன்று இரவு 7.30 மணியளவில் ஐஸ்வர்யா மட்டும் தனியாக புறப்பட்டு அங்கிருந்து சென்று உள்ளார். இந்த நிலையில், ஓட்டலில் புக் செய்த நேரம் முடிந்துவிட்டதால், டிசம்பர் 9ஆம் தேதி பிற்பகல் 2.30 மணியளவில் லாட்ஜ் ஊழியர்கள் அறையைக் காலி செய்யச் சொல்வதற்காக சென்று உள்ளனர்.

அப்போது, சுரேஷ் பாபு தங்கியிருந்த அறைக் கதவை ஊழியர்கள் தட்டி உள்ளனர். ஆனால், நீண்ட நேரமாகியும் அறை திறக்காததால் விடுதியில் உள்ள மற்றொரு சாவி மூலம் அறையைத் திறந்து பார்த்து உள்ளனர். அப்போது, சுரேஷ் பாபு அறையில் உள்ள கட்டிலில், ஆடைகள் எதுவும் இல்லாமல் நிர்வாண நிலையில் சடலமாகக் கிடந்து உள்ளார்.

இதையும் படிங்க: 4வது கணவரைத் தேடிய பிரியா.. வசமாக சிக்கிய விவசாயி.. லட்சக்கணக்கில் மோசடி!

பின்னர் இந்தச் சம்பவம் குறித்து உடனடியாக பாண்டிபஜார் போலீசாருக்கு லாட்ஜ் ஊழியர்கள் தகவல் அளித்து உள்ளனர். இதன் பேரில் வந்த பாண்டிபஜார் போலீசார், உயிரிழந்த சுரேஷ் பாபுவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கே.கே.நகர் ESI மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, சுரேஷ் பாபு உடன் தங்கி இருந்த ஐஸ்வர்யாவைப் பிடித்து விசாரித்தனர். இதில், குடும்ப வறுமை காரணமாக கடந்த 20 நாட்களுக்கு முன்பு தான் சுரேஷ் பாபு வேலை செய்யும் ஓட்டலில் பணிப்பெண்ணாக ஐஸ்வர்யா வேலைக்கு சேர்ந்து உள்ளார்.

இந்த நிலையில், சுரேஷ்பாபு அவரிடம் தனியாக பேச வேண்டும் எனக் கூறி விடுதிக்கு அழைத்துச் சென்றது மட்டுமல்லாமல், அவரது பாலியல் தேவைக்கு பயன்படுத்தி உள்ளார். மாலை இருவரும் பிரியாணி சாப்பிட்டுவிட்டு, அதன்பின் இரவு 7.30 மணிக்கு விடுதியில் இருந்து தான் புறப்பட்டதாகக் ஐஸ்வர்யா கூறியுள்ளார். மேலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Hariharasudhan R

Recent Posts

‘விராட்கோலி’ அவரு முன்னாடி டம்மி…வன்மத்தை கக்கும் பாகிஸ்தான் நிர்வாகம்.!

மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…

50 minutes ago

தமிழக வீரரால் இந்திய அணிக்கு தலைவலி…பெரும் சிக்கலில் ரோஹித்…முடிவு யார் கையில்.!

அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…

2 hours ago

படப்பிடிப்பில் நடிகையிடம் அத்துமீறல்.. தற்கொலை செய்ய முயற்சி : இயக்குநரின் காம முகம்!

சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…

2 hours ago

’அதற்கு நான் காரணமல்ல’.. ராஷ்மிகா வரிசையில் பிரபல நடிகை!

தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…

2 hours ago

அனுஷ்கா சர்மா சொன்னதும் வீடீயோவை டெலீட் பண்ணிட்டேன்..அசிங்கப்பட்ட நடிகர் மாதவன்.!

AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…

3 hours ago

திமுகதான் நம்பர் ஒன்.. அடித்துக் கூறும் அண்ணாமலை.. மறுக்கும் அமைச்சர்.. என்ன நடக்கிறது?

மத்திய, மாநில அரசுகளின் கடன் விவரங்களைக் குறிப்பிட்டு, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அண்ணாமலை கருத்து மோதலில் ஈடுபட்டுள்ளனர். சென்னை:…

3 hours ago

This website uses cookies.