உளுந்தூர்பேட்டையில் பசிக்காக போண்டா, டீ சாப்பிட்ட நகராட்சி தற்காலிக ஊழியர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகராட்சி உளுந்தாண்டார் கோயில் துப்புரவு குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் பிரபு (36). இவர் உளுந்தூர்பேட்டை நகராட்சியில் குடிநீர் வினியோகம் செய்யும் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.
கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு பணியின் போது, மாலை நேரத்தில் பசிக்காக விருதாச்சலம் ரோட்டில் உள்ள ஒரு கடையில், இரண்டு போண்டா, ஒரு டீ சாப்பிட்டுள்ளார். அதன் பிறகு இரவு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டதால், அவரை உடனடியாக அங்கிருந்தவர்கள் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளித்தனர்.
பின்னர், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த பிரபு, இன்று மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இவருக்கு மனைவி மற்றும் மூன்று பிள்ளைகள் உள்ளன.
பசிக்காக போண்டா மற்றும் டீ சாப்பிட்டவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் உள்ள உறவினருடைய அதிர்ச்சியும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில், இன்று (பிப்.26) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 25 ரூபாய் குறைந்து 8 ஆயிரத்து 50 ரூபாய்க்கு…
தவெக இரண்டாம் ஆண்டு துவக்க விழா மாமல்லபுரம் அருகே பிரமாண்டமாக நடைபெற உள்ள நிலையில், விஜய் முக்கிய அறிவிப்புகளை வெளியிட…
முதல்வரே தமிழகத்தில் மூன்றாவது மொழி என்னவென்று முடிவெடுக்க முடியாது, பெற்றோர் ஆசிரியர் கழகம் தான் முடிவெடுக்கும் என அண்ணாமலை கூறியுள்ளார்.…
கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…
ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…
This website uses cookies.