உளுந்தூர்பேட்டையில் பசிக்காக போண்டா, டீ சாப்பிட்ட நகராட்சி தற்காலிக ஊழியர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகராட்சி உளுந்தாண்டார் கோயில் துப்புரவு குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் பிரபு (36). இவர் உளுந்தூர்பேட்டை நகராட்சியில் குடிநீர் வினியோகம் செய்யும் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.
கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு பணியின் போது, மாலை நேரத்தில் பசிக்காக விருதாச்சலம் ரோட்டில் உள்ள ஒரு கடையில், இரண்டு போண்டா, ஒரு டீ சாப்பிட்டுள்ளார். அதன் பிறகு இரவு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டதால், அவரை உடனடியாக அங்கிருந்தவர்கள் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளித்தனர்.
பின்னர், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த பிரபு, இன்று மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இவருக்கு மனைவி மற்றும் மூன்று பிள்ளைகள் உள்ளன.
பசிக்காக போண்டா மற்றும் டீ சாப்பிட்டவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் உள்ள உறவினருடைய அதிர்ச்சியும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
நியமன எம் பி இளையாராஜா இசைஞானி என்று தமிழக மக்களால் போற்றப்படும் இளையராஜா, தற்போது நியமன எம் பி ஆகவும்…
நேற்று ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் மற்றும் குஜராத் அணிகளுக்கிடையே பலப்பரீட்சை நடந்தது, அதில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி…
ஃபேமிலி மேன் 1, ஃபேமிலி மேன் 2 வெற்றியைத் தொடர்ந்து ஃபேமிலி மேன் 3 உருவாகி வருகிறது. இந்த வெப்…
This website uses cookies.