ஓட்டப்பிடாரம் அருகே சொத்து பிரச்னை காரணமாக தம்பியை அண்ணன் கட்டையால் அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே உள்ள சோழபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன். இரு மகன்களான பொன்மாடசாமி (30), முத்துராஜ் (26), இருவரும் கூலி வேலை செய்து வந்துள்ளனர். இருவருக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில்,நேற்று இரவு சுமார் ஒரு மணி அளவில் இருவருக்கிடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. பின்னர், தம்பி முத்துராஜை அண்ணன் பொன்மாடசாமி கையில் வைத்திருந்த கட்டையால் தலையில் பலமாக அடித்து கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டார்.
இதனை அறிந்த வந்த எப்போது வென்றான் போலீசார் விரைந்து சென்று முத்துராஜின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்துனர். மேலும், தப்பி ஓடிய பொன்மாடசாமியை தீவிரமாக தேடி வந்த நிலையில் அவர் கீழ ஈரால் பகுதியில் பதுங்கி இருந்ததையடுத்து, போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது; தன்னுடன் மது மற்றும் கஞ்சா போதையில் தனக்கு வீட்டில் பங்கு வேண்டும் என்று அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வருவது வழக்கம், அதன்படி, நேற்று இரவு முத்துராஜ் பொன்மாடசாமி வீட்டிற்கு சென்று மனைவி முத்துமாரியிடம் தகராறில் ஈடுபட்டு வீட்டில் உள்ள டிவி கதவு உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கி உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, ஆத்திரமடைந்த பொன் மாடசாமி வீட்டில் உள்ள கட்டையை எடுத்து முத்துராஜ் என்பவனை தேடி வந்த நிலையில், அதே பகுதியியை சேர்ந்த செல்வபாண்டி என்பவர் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த பொன்மாடசாமி கையில் வைத்திருந்த கட்டையால் சரமரியாக தாக்கியுள்ளனர்.
பின்னர், முத்துராஜ் தலையில் பலமாக தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக முத்துராஜ் உயிரிழந்ததாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து எப்போதுவென்றான் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சொத்து பிரச்சனை காரணமாக தம்பியை அண்ணனே கட்டையால் அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
யதார்த்த சினிமா கோலிவுட்டில் யதார்த்த சினிமா இயக்குனர்களுள் மிகவும் முக்கியமானவராக வலம் வருபவர் வசந்தபாலன். இவர் இயக்கிய “வெயில்”, “அங்காடித்…
திருச்சியில் அமைச்சர் கே.என்.நேருவுக்கு சொந்தமான 2 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடந்து வருவது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தமிழக…
நெட்பிலிக்ஸில் நயன்தாரா படம்… சசிகாந்த் இயக்கத்தில் நயன்தாரா, மாதவன், சித்தார்த் ஆகியோரின் நடிப்பில் கடந்த 4 ஆம் தேதி நெட்பிலிக்ஸ்…
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் இன்று சட்டப்பேரவைக்கு வந்த அதிமுக எம்எல்ஏக்கள் அந்த தியாகி யார் என்ற…
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
This website uses cookies.