தருமபுரி அருகே சமூக வலைதளம் மூலம் பழகி சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்ற இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல் துறையினர் கைது செய்தனர்.
தருமபுரி அருகே உள்ள அரசு பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கும், விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் பகுதியை சேர்ந்த நவீன்குமார் (19) என்பவருடன் சமூக வலைத்தளம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அடிக்கடி சமூக வலைதளத்தில் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டு பழகி வந்துள்ளார்.
கடந்த மாதம் சிறுமியை ஆசை வார்த்தை கூறி நவீன்குமார் தருமபுரிக்கு வந்து கடத்திச் சென்றுள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் வீட்டை விட்டு பள்ளிக்கு சென்ற சிறுமி வீடு திரும்பாததால், சிறுமியின் பெற்றோர்கள் தருமபுரி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து, சிறுமியின் செல்போன் எண்ணை வைத்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது, தருமபுரியை சேர்ந்த சிறுமிக்கும், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் நவீன்குமார் என்பவரும் அடிக்கடி சமூகவலைதளத்தில் கருத்துக்களை பகிர்ந்து கொண்டது தெரியவந்தது.
இதனையடுத்து, செல்போன் நம்பரை வைத்து காவல் துறையினர் தேடி வந்தனர். அப்பொழுது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று திருமணம் செய்து தஞ்சாவூர் பகுதியில் நவீன்குமார் தங்கியிருந்தது காவல் துறையினருக்கு தெரியவந்தது. பின்னர், நவீன்குமாரையும், சிறுமியையும் காவல் துறையினர் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
இதில் சிறுமியை கடத்திச் சென்று குழந்தை திருமணம் செய்து, பாலியல் வன்புணர்வு செய்ததாக நவீன்குமாரை தருமபுரி அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சைக்காக தருமபுரி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் பழகி சிறுமியை ஆசை வார்த்தை கூறி, கடத்தி குழந்தைத் திருமணம் செய்து கொண்டு சம்பவம் தருமபுரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.