கோவை: கோவையில் தனது மனைவியுடன் நண்பர் பேசியதைக் கண்டித்த கணவருக்கு கத்திக்குத்து விழுந்துள்ளது.
ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர் மணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது.) இவரது நண்பர் சந்தோஷ். இவர்கள் இருவரும் மணியின் வீட்டில் மது அருந்துவது வழக்கம். இதனிடையே சந்தோஷ் மற்றும் மணியின் மனைவிக்கு இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதைப் பார்த்த மணி தனது மனைவியை கண்டித்துள்ளார். நேற்று சந்தோஷ் மற்றும் மணியின் மனைவி ஆகிய இருவரும் பேசிக்கொண்டிருந்ததை பார்த்த மணி, சந்தோஷிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றிவிடவே இருவரிடையே கைகலப்பு ஏற்பட்டது. அப்போது சந்தோஷ் மணியை கத்தியால் குத்தி தாக்கினார்.
இதுகுறித்து மணி ரத்தினபுரி போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சந்தோஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அட்டர் பிளாப் பாலிவுட்டில் ஏ.ஆர்.முருகதாஸ் சல்மான் கானை வைத்து இயக்கிய திரைப்படம் “சிகந்தர்”. இதில் சல்மான் கானுக்கு ஜோடியாக ராஷ்மிகா…
5 கோடி இழப்பீடு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடைபெறும் வக்பு திருத்தச்…
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காந்தி கலையரங்கத்தில் சட்ட மாமேதை அம்பேத்கரின் பிறந்த நாள் விழா, வக்ஃபு வாரிய சட்ட திருத்தம்…
வைகைப்புயல் மீது பிராது வைகைப்புயல் என்று அழைக்கப்படும் காமெடி நடிகர் வடிவேலு கோலிவுட்டின் டாப் காமெடி நடிகராக வலம் வந்த…
This website uses cookies.