முறைத்துப் பார்த்ததாக கூறி பாத்திர வியாபாரியை வீடு புகுந்து கத்தியால் குத்தி கொலை செய்த விவகாரத்தில் 24 மணி நேரத்தில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே உள்ள கிளியனூர் பகுதியைச் சேர்ந்த ராமையா என்பவரது மகன் கனகராஜ் (வயது 53). இவர் தனது இருசக்கர வாகனத்தில் ஊர் ஊராகச் சென்று பாத்திரம் வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக அதே பகுதியைச் சேர்ந்த கலைவாணன் என்பவருக்கும், கனகராஜ்க்கும் வீட்டின் கூரையில் உள்ள வாரியில் மழைநீர் விழுவதால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை அடிக்கடி நடந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், அப்பகுதியில் உள்ள கோவிலில் நேற்று தீமிதி திருவிழா நடைபெற்றது. அப்போது, கனகராஜ் கலைவாணன் மகன் விஷ்வாவை பார்த்து முறைத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கனகராஜ் அவரது உறவினர் குருசாமி என்பவர் வீட்டில் நின்று கொண்டிருந்தார். அப்போது, விஷ்வா, அவரது சகோதரர் ஜெயக்குமார் உள்ளிட்ட எட்டு பேர் குருசாமி வீட்டில் உள்ள பொருட்களை சேதப்படுத்தி கனகராஜை கத்தியால் நெஞ்சில் குத்தியுள்ளனர்.இதில் அவர் ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் சரிந்து விழுந்துள்ளார்.
மேலும், தடுக்க வந்த கனகராஜ் மகன் ஆனந்த் மற்றும் குருசாமி ஆகியோரை கத்தியால் தாக்கியுள்ளனர். இதில், கனகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும், பலத்த காயமடைந்த ஆனந்த் குருசாமி ஆகியோரை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் இச்சம்பவம் பற்றி அறிந்த பேரளம் போலீசார் கனகராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், மேலும் இதுகுறித்து பேரளம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விஷ்வா, ஜெயக்குமார் உள்ளிட்ட 8 பேரை வலை வீசி தேடி வந்தனர்.
இந்த நிலையில், தற்போது விஷ்வா (22), ஜெயக்குமார் (30), சூர்யா (25), கலைவாணன் (60), சுரேஷ் (40), அரவிந்தன் (27), சுப்பிரமணியன் (44), அசோக் குமார் (27), பிரகாஷ் (40), விஜய் (20) ஆகியோரை பேரிலும் காவல்துறையினர் 24 மணி நேரத்தில் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
சுந்தர் சி கதையை உடனே ஓகே செய்த நடிகர் கார்த்தி சுந்தர் சி தமிழ் திரைப்பட உலகில் முன்னணி இயக்குனராக…
நண்பர் ஸ்ரீனிவாசா ராவின் அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டு! பிரபல இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலி மீது அவரது நீண்டகால நண்பர் எனக்கூறும் திரைப்படத்…
தஞ்சையில், நெருங்கிப் பழகி தனிமையில் இருந்ததால் உருவான கருவைக் கலைக்கச் சொல்லி கொலை மிரட்டல் விடுத்த ஜிம் உரிமையாளர் கைது…
அடித்து சொல்லும் சந்தீப் கிஷன் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி திரைப்படம் 2025 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும்…
அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் நாளில், கையெழுத்து இயக்கத்தை நடத்த உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். திருப்பூர்:…
நடிகர் மாதவனின் புதிய செயலி நடிகர் மாதவன் பங்குதாரராக இருக்கும் ‘Parent Army (Parent Geenee)’ செயலி சென்னையில் உள்ள…
This website uses cookies.