தமிழ்நாடு போதை பொருள் நுண்ணறிவு பிரிவு காவல் நிலையத்துக்கு மர்ம நபர்கள் தீ வைத்த சம்பவம் தொடர்பாக போலீஸ் விசாரணை நடந்து வரும் நிலையில், சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
மதுரை விஸ்வநாதபுரம் பகுதியில் மாவட்ட போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், வழக்கு தொடர்பாக பத்துக்கு மேற்பட்ட வாகனங்கள் காவல் நிலையம் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. நேற்று இரவு அங்கு வந்த மர்ம நபர்கள் காவல் நிலையத்தில் வாசலில் இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்து விட்டு சென்றுள்ளனர்.
மேலும் படிக்க: ராமதாஸ் குறித்து அவதூறு… கொலை மிரட்டல் விடுத்த திமுக பிரமுகர் ; பாமகவினர் பரபரப்பு புகார்..!!!
இதனால் காவல் நிலைய வளாகத்தில் உள்ள இருசக்கர வாகனங்கள் மற்றும் காவல் நிலையத்தில் முன் பக்கம் முழுமையாக இருந்து நாசமாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து தல்லாகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
மேலும், வழக்கு தொடர்பான ஆவணங்களை ஆதரத்தை அழிக்கும் நோக்கோடு, இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதா அல்லது வேறு ஏதும் காரணமா…? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். காவல் நிலையத்திற்கு தீ வைத்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
சரிந்து விழுந்த அஜித் கட் அவுட்… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற…
This website uses cookies.