திருச்சி : மண்ணச்சநல்லூர் அருகே திருமணம் செய்து 11 வருடமாகியும் குழந்தை இல்லாத ஏக்கத்தில் பெண் தீயிட்டு தற்கொலை செய்தகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே நொச்சியம் குமரக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சேர்ந்தவர்கள் காத்தமுத்து-பேபி ஷாலினி தம்பதியினர். இவர்களுக்கு கடந்த 11 ஆண்டுளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. அதனால் பல்வேறு கோவில்களுக்கு சென்று குழந்தை வரம் வேண்டி சாமி தரிசனம் செய்துள்ளனர். மேலும் மருத்துவமனை உள்பட பல்வேறு இடங்களுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளனர். ஆனாலும் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை. அதனால் பேபி ஷாலினி மனமுடைந்த நிலையில் காணப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று தனது கணவர் வெளியில் சென்ற நேரம் பார்த்து வீட்டின் மாடியில் மண்ணெண்னை எடுத்து ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் கருதி உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த வந்த மண்ணச்சநல்லூர் போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் தற்கொலை செய்துகொண்டது குறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
என்னை கடவுள் எனச் சொல்லி கடவுளை தாழ்த்திவிட வேண்டாம் என்றும், நான் சாதாரண மனிதன்தான் என்றும் இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார்.…
சொல் ஒன்று செயல் ஒன்றாக விஜயகாந்த் இருந்ததில்லை எனக் கூறிய பிரேமலதா, கோலா, நகை விளம்பரங்களில் சிலர் நடிப்பர் என…
This website uses cookies.