சிவகங்கை : மானாமதுரை அருகே பேத்தியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கியதாக தாத்தா போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே பட்டத்தரசி கிராமத்தில் வசித்து வருபவர் ராசு (64). இவர் தன்னுடைய 13 வயது சொந்த பேத்தியை கடந்த மூன்று மாதங்களாக தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் இதுகுறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என்றும் மிரட்டல் விடுத்துள்ளார். இதனைத்தொடர்ந்து அச்சிறுமிக்கு தொடர்ந்து உடல்நிலை சரியில்லாமல் போனதையடுத்து சிறுமியின் பெற்றோர் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி 3 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், சிறுமியிடம் விசாரித்தனர். அப்போது சிறுமியின் தாத்தா ராசு தான் தனது கர்ப்பத்திற்கு காரணம் என்றும், மிரட்டி பல முறை பாலியல் வன்கொடுமை செய்தது குறித்தும் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் மானாமதுரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் மானாமதுரை அனைத்து மகளிர் போலீசார் சிறுமியின் தாத்தா ராசுவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.