Categories: தமிழகம்

மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் பரபரப்பு.. குவிந்த இந்து முன்னணியினர் : சுற்றி வளைத்த போலீஸ்!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் தமிழக இந்து சமய அறநிலயத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலுக்கு தமிழகம் மட்டுமில்லாமல் கேரளாவை சேர்ந்த பெண் பக்தர்கள் இருமுடி கட்டுடன் வந்து அம்மனை தரிசித்து செல்வதால் இந்த கோயில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது.

இந்த கோயிலில் வருடா வருடம் மாசி பெரும் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி 10-நாட்கள் நடைபெறுவது வழக்கம்

இந்த திருவிழாவின் போது ஹைந்தவ ஹிந்து சேவா சங்கம் சார்பில் 10-நாட்கள் சமய மாநாடு நடைபெறுவது வழக்கம்.

இந்த வருட மாசி திருவிழா மார்ச் மாதம் 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ள நிலையில் திருவிழாவின் போது நடத்தப்படும் சமய மாநாட்டிற்கு இந்து சமய அறநிலையத்துறை தடை விதித்தது.

இந்த நிலையில் 86-வருட பாரம்பரிய நிகழ்வான சமய மாநாட்டிற்கு தடை விதித்த இந்து சமய அறநிலையத்துறையை கண்டித்து கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பாஜக மற்றும் இந்து அமைப்புகள் சார்பாக மறியல் ஆர்பாட்டம் என பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இன்று இந்து முன்னணி சார்பில் மண்டைக்காடு கோயில் முன் ஆர்பாட்டம் மற்று மறியல் போராட்டம் நடத்த பல்வேறு அமைப்புகளூக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மண்டைக்காடு கோயில் வளாகத்தை சுற்றிலும் 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மாவட்டத்தில் இருந்து போராட்டத்திற்கு வருபவர்களை தடுத்து நிறுத்தும் விதமாக மாவட்டம் முழுவதும் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் பேரிகாடு அமைத்து குமரி, நெல்லை, தூத்துக்குடி தென்காசி, விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

இவர்கள் அந்த வழியாக வரும் வாகனங்களை தீவிர சோதனைக்கு பின் அனுப்பி வைத்து வருகின்றனர். இந்த நிலையில் இந்து முன்னணி சார்பில் நடத்தப்பட இருந்த போராட்டங்கள் தற்போது ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியான நிலையிலும் மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்களையும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதால் கோயில் சுற்று வட்டார பகுதிகள் பரபரப்பாகவே காணப்படுகிறது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

2 முறை கருக்கலைப்பு.. திருமணத்திற்கு வற்புறுத்திய இளம்பெண் : நடுக்காட்டில் பயங்கரம்!

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தாலுகா கன்னிவாடி காவல் நிலையத்திற்குட்பட்ட கொடைக்கானலுக்கு செல்லக்கூடிய தருமத்துப்பட்டி - பன்றிமலை அமைதி சோலை அருகே…

31 minutes ago

எங்க பாட்டுதானே ஜெயிக்க வைக்குது; காசு கொடுத்தா என்ன? – கண்டபடி கேட்ட கங்கை அமரன்

5 கோடி நஷ்டஈடு அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் பல கிளாசிக் பாடல்கள் ஆங்காகே பின்னணியில் இடம்பெற்றிருந்தன.…

2 hours ago

திமுக அலுவலகத்தில் மேல் தளத்தில் ரெய்டு.. கீழ் தளத்தில் பேக்கரி டீலிங் ; இபிஎஸ் பதிலடி!

இன்று சட்டமன்றத்தில் நீட் தேர்வு கொண்டு வந்தது யார் என்பது குறித்து விவாதம் நடந்த போது, அதிமுக எம்எல்ஏ கோவிந்தசாமி,…

2 hours ago

திருமணம் ஆகுறதுக்கு முன்னாடியே கர்ப்பம்; அப்பா யார்னு கேட்பாங்களே? விஜய் டிவி பிரியங்காவின் பகீர் பின்னணி

டாப் தொகுப்பாளினி விஜய் தொலைக்காட்சியில் கிட்டத்தட்ட 8 வருடங்களுக்கும் மேலாக பல்வேறு நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக வலம் வருபவர்தான் பிரியங்கா தேஷ்பாண்டே.…

3 hours ago

பேக்கரி டீலிங்… நீட் தேர்வு குறித்து காரசாரம் : அமைச்சருக்கு அதிமுக கடும் எதிர்ப்பு!

நீட் தேர்வை தமிழ்நாட்டில் கொண்டு வந்தது யார் என்ற விவாதம் இன்று சட்டபேரவையில் திமுக - அதிமுக இடையே காரசார…

3 hours ago

விபத்துக்கு கிடைத்த வெகுமதி- கார் ரேஸில் மீண்டும் தடம் பதித்த அஜித்குமார்! மாஸ் காட்டுறாரே!

அஜித்தும் கார் ரேஸும் அஜித்குமார் சினிமாவுக்கு நடிக்க வந்ததற்கு காரணமே அதில் வரும் பணத்தை வைத்து  கார் பந்தயத்தில் கலந்துகொள்வதற்குத்தான்…

4 hours ago

This website uses cookies.