மங்களூரில் குக்கர் வெடிகுண்டு வெடித்த வழக்கு தொடர்பாக குமரி மாவட்டம் நாகர்கோவிலில் தனியார் லாட்ஜில் மங்களூர் போலீசார் விசாரணை நடத்தியதில் சில தகவல்கள் வெளியாகியுள்ளது.
கர்நாடக மாநிலம் மங்களூரூ மாவட்டத்தில் கடந்த 19 ம் தேதி ஆட்டோவில் குண்டு வெடித்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில், ஆட்டோவில் வெடித்தது குக்கர் குண்டு என தெரிய வந்தது. ஆட்டோவில் சென்றவன் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய ஷாரிக் என்ற முகமது ஷாரிக் (22) என போலீசார் கண்டு பிடித்தனர்.
இதனை தொடர்ந்து என்.ஐ.ஏ. மற்றும் உளவுப்பிரிவு போலீசாரும் விசாரணையில் இறங்கினர். ஷாரிக்கின் செல்போன் மற்றும் டைரி போன்றவற்றை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தபோது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.
அந்த வகையில், கோவை, மதுரை, நாகர்கோவில் என பல்வேறு பகுதிகளுக்கும் ஷாரிக் சென்று அந்த ஊர்களில் போலி ஆவணம் மூலம் அறை எடுத்து தங்கி உள்ளதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
இந்நிலையில் மங்களூரூ போலீசார் இன்று நாகர்கோவில் வந்தனர். அவர்கள் மீனாட்சிபுரம் பகுதியில் அமைந்துள்ள தங்கும் விடுதிகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது வெடிகுண்டு சம்பவம் தொடர்புடைய முகமது ஷாரிக், பிரேம் ராஜ் என்ற பெயரில் போலி ஆவணங்கள் கொடுத்து தங்கி இருந்த தகவல் கிடைத்துள்ளது.
8-9-2022 முதல் 12-9-2022 வரை நாகர்கோவிலில் தங்கி இருந்ததும் தெரிய வந்துள்ளது. இவர் தங்கி இருந்த ஐந்து நாட்களில் யாரை சந்தித்தார்..? எங்கெல்லாம் சென்றார்..? என்பது போன்ற கேள்விகள் எழுந்துள்ள நிலையில், இது தொடர்பாகவும் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.
ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…
பிசியான நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது “பராசக்தி”, “மதராஸி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.…
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி விவகாரம் தொடர்பாக, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மோதல் தொடர்பாக,…
திருப்புமுனை அமையாத நடிகர் மணிரத்னம் இயக்கிய “கடல்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடையவில்லை…
மணிரத்னம்-கமல் கூட்டணி “நாயகன்” திரைப்படத்தை தொடர்ந்து 37 வருடங்கள் கழித்து மணிரத்னமும் கமல்ஹாசனும் இணைந்துள்ள திரைப்படம் “தக் லைஃப்”. இதில்…
உத்தரபிரதேசம் அலிகார் மட்ராக் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தனர். இறுதியில் நல்ல சம்பந்தம் கிடைததது. இருவருக்கு வரும்…
This website uses cookies.