தருமபுரி : ஒகேனக்கல் காவிரி ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று இறந்து மிதந்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நாள்தோறும் கர்நாடக, ஆந்திரா மற்றும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்தும், பரிசலில் சென்று மகிழ்வர். இந்த நிலையில் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தொங்கு பாலம் ஆடியில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதந்து வந்துள்ளது. இதைப் பார்த்த பரிசல் ஓட்டிகள் ஒகேனக்கல் தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
தகவலின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை கைப்பற்றி பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஒகேனக்கல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அடையாளம் தெரியாத நபர் யார் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒகேனக்கல் காவிரி ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பது இந்த மாதத்திலேயே இரண்டாவது சடலம் என்பது குறிப்பிடதக்கது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தியேட்டரை காலி பண்ணும் விடாமுயற்சி அஜித் நடிப்பில் வெளிவந்த விடாமுயற்சி திரைப்படத்தின் OTT ரிலீஸ் தேதியை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.இதனால்…
மாணவர்களை கெடுக்கும் சினிமா தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா திரைப்படம் மாணவர்களின் மனநிலையை கெடுத்து வைக்கிறது…
பிரார்த்தனையில் ஈடுபட்ட ரிஷ்வான் துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளிடேயே நடைபெற்ற சாம்பியன்ஸ் போட்டியின் போது பாகிஸ்தான் அணியின் கேப்டன்…
தமிழ் புத்தாண்டு தினத்தன்று விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் ஸ்பெஷல் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.…
பிரபுதேவா நடன நிகழ்ச்சியில் வடிவேல் பேச்சு நடிகரும் நடன இயக்குனருமான பிரபுதேவாவின் முதல் நடன நிகழ்ச்சி சென்னையில் பிரமாண்டமாக பெப்ரவரி…
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், தகுதியுள்ள நபர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத்…
This website uses cookies.