Categories: தமிழகம்

அரசு கல்லூரி வளாகத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் சடலம் : விசாரணையில் வெளியான பகீர் தகவல்!!

கடன் தொல்லை காரணமாக அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர் தூக்கிட்டு தற்கொலை செய்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் நாகூர்கனி (வயது 40). இவர் திருப்பூர் காலேஜ் ரோடு பாறைகுழி பகுதியில் தங்கியிருந்து தனியார் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் டிரைவராக வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் இவர் அக்கம் பக்கத்தில் செலவுக்காக கடன் வாங்கியதாக தெரிகிறது. ஆனால் கடனை உரிய நேரத்தில் யாருக்கும் திருப்பி கொடுக்கவில்லை.

இதனால் கடன் கொடுத்தவர்கள் பணத்தை தரும்படி தொடர்ந்து கேட்டு வந்துள்ளனர். இதனால் மனமுடைந்து காணப்பட்ட நாகூர்கனி நேற்று இரவு திடீரென மாயமானார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அக்கம் பக்கத்திலும் அவர் வேலை பார்த்த மருத்துவமனையிலும் தேடிப் பார்த்தனர். ஆனால் எங்கும் அவரை காணவில்லை.

இந்த நிலையில் திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி வளாகத்தின் பின்புறத்தில் உள்ள ஒரு மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஒருவர் பிணமாக கிடப்பதாக திருப்பூர் வடக்கு போலீசருக்கு தகவல் கிடைத்தது.

போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் அவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தியபோது அவர் ஆம்புலன்ஸ் டிரைவர் நாகூர்கனி என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ

தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…

1 day ago

சாதி, மதம் பார்த்து தலைவர்களை தேர்வு செய்யக்கூடாது : திருச்சி எம்பி துரை வைகோ பரபரப்பு பேச்சு!

மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…

1 day ago

இயக்குநர் பாலா பேச்சை கேட்டு ஏமாந்துட்டேன்.. சினிமாவில் இருந்து விலகுகிறேன் : இளம் நடிகர் ஆதங்கம்!

இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…

2 days ago

ராசி முக்கியம் பிகிலு? மூக்குத்தி அம்மன் 2 படத்தில் சுந்தர் சி பெயர் வந்ததுக்கு இப்படி ஒரு காரணமா?

சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…

2 days ago

தவெகவை விட பலத்தை காட்ட வேண்டும்… பரபரப்பை கிளப்பிய அதிமுக மூத்த தலைவர்!

திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…

2 days ago

என்ன இப்படி சண்டப்போட்டுக்குறாங்க- தக் லைஃப் படத்தில் இருந்து திடீரென லீக் ஆன காட்சி?

கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…

2 days ago

This website uses cookies.