திருப்பூர் கே.செட்டிபாளையம் பகுதியில் உள்ள பேக்கரி முன்பு அழுகிய நிலையில் ஆண் சடலம். கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து நல்லூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருப்பூர் தாராபுரம் ரோட்டில் உள்ள கே.செட்டிபாளையம் பகுதியில் ஒரு பேக்கரியின் முன்புறம் ஆண் பிணம் கிடப்பதாக நல்லூர் போலீசாருக்கு தகவல் வந்தது. தகவலின் அடிப்படையில் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது பேக்கரியின் முன்புறமுள்ள படிகளில் பலகாரங்கள் செய்யும் இடத்தில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார்.
அழுகிய நிலையில் உடல் உறுப்புகள் சேதம் அடைந்திருந்தது. உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து நல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இறந்தவர் பெயர் சண்முகம் என்பதும் அந்த பகுதியில் பெயிண்டர் வேலை செய்து வருவதும் தெரிய வந்தது.
மேலும் அவர் இறந்து இரண்டு மூன்று நாட்களுக்கு மேல் ஆகி இருக்கலாம் என்பது தெரிந்தது. அவர் எங்கு வசிக்கிறார் எப்படி இறந்தார். கொலை செய்யப்பட்டாரா? அல்லது தானாகவே அந்த இடத்தில் விழுந்து இறந்தாரா? இறப்புக்கு வேறு ஏதாவது காரணங்கள் இருக்கிறதா என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.