இந்தியாவிலேயே ஆணவக்கொலைகள் அதிகம் நடக்கும் மாநிலமாக தமிழகம் இருக்கிறது என மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளார் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சென்னை: பெரியாரின் நினைவுநாளை முன்னிட்டு, சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து அவர் பேசினார்.
அப்போது பேசிய கே.பாலகிருஷ்ணன், “பெரியாரின் வழிவந்த திராவிட இயக்கங்கள் தான் தமிழ்நாட்டில் ஆட்சி செலுத்தி வருகின்றது. ஆனாலும் கூட இந்தியாவிலேயே ஆணவக்கொலைகள் அதிகம் நடக்கும் மாநிலமாக தமிழகம் இருக்கிறது. தலித் மக்களுக்கு தினந்தோறும் கொடுமைகள் இழைக்கப்படுகிறது.
சாதிய உணர்வுகளும், சாதிய அணிசேர்க்கையும் கொடிகட்டிப் பறக்கும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. கடந்த அரைநூற்றாண்டு கால ஆட்சியில் பெரியாரியக் கொள்கைகள் படிப்படியாக கைவிடப்பட்டு உள்ளன என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
பெரியார் நினைவுநாளில், அவர் தூக்கிப் பிடித்த சமூக ஒற்றுமை, சாதிகள் அற்ற சமூகம் வேண்டும். பெரியாரின் திசை வழியில் பயணிக்க வேண்டும் என அனைவரையும் அழைக்கிறோம். பெரியாரின் கொள்கைகளை அமல்படுத்த அரசு முன்வர வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மனைவி ஊரில் வாழ்ந்த கணவர்.. தட்டிக்கேட்க வந்த உறவினர்கள்.. பாய்ந்த கத்தி.. சிவகாசியில் அதிர்ச்சி!
மேலும், ஆளும் திமுக உடன் கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இவ்வாறு பேசி இருப்பது கூட்டணியில் புதிய சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் போது காங்கிரஸும், ஆதவ் அர்ஜுனா விவகாரத்தில் விசிகவும், திமுகவுக்கு எதிரான நிலைப்பாட்டை மறைமுகமாக எடுத்ததாக விமர்சனங்கள் வந்ததும் குறிப்பிடத்தக்கது.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.