தமிழகம்

மரம் தங்கசாமி நினைவு நாள்; காவேரி கூக்குரல் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா!

காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் ‘மரம் தங்கசாமி அவர்களின் நினைவு தினத்தை’ முன்னிட்டு இன்று (16/09/2024) தமிழகம் முழுவதும் 1,67,828 மரக்கன்றுகள் விவசாய நிலங்களில் நடப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த திரு. மரம் தங்கசாமி அவர்கள், மரங்கள் வளர்ப்பதில் பலருக்கு முன் மாதிரியாகவும், முன்னோடியாகவும் திகழ்ந்தவர் . மரம் சார்ந்த விவசாயம் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துக் கூறி மாவட்டத்தையே பசுஞ்சோலையாக மாற்றியவர். மேலும் ஈஷாவின் பசுமைக் கரங்கள் திட்டத்துடன் இணைந்து செயல் புரிந்தவர்.

ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் மரம் தங்கசாமி அவர்களின் சுற்றுச்சூழல் பணியை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் அவரின் நினைவு நாளில் மரக் கன்றுகள் நடும் பணியை முன்னெடுத்து வருகிறது. அந்த வகையில் இந்தாண்டு நினைவு தினத்தில் தமிழகத்தில் 37 மாவட்டங்களில், 86 விவசாய நிலங்கள் தேர்வு செய்யப்பட்டு, 691 ஏக்கரில் மொத்தம் 1,67,828 மரக்கன்றுகள் நடப்பட்டது. மேலும் மரம் தங்கசாமி அவர்களின் கனவை நிறைவேற்றும் வகையில் மரம் சார்ந்த விவசாயம் செய்ய விவசாயிகளுக்கு பக்கபலமாக காவேரி கூக்குரல் இயக்கம் செயல்பட்டு வருகிறது.

ஈஷா சார்பாக இதுவரை விவசாயிகளுக்கு 11 கோடி மரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தமிழகத்தில் 1.12 கோடி மரங்கள் நடப்பட்டுள்ளது, இந்த ஆண்டு தமிழகத்தில் 1.21 கோடி மரங்கள் நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 47.35 லட்சம் மரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சுழலுடன் சேர்ந்து விவசாயிகளின் பொருளாதாரமும் மேம்படும் வகையில் தேக்கு, மலைவேம்பு, கருமருது, வேங்கை, மஞ்சள் கடம்பு, சந்தனம், செஞ்சந்தனம், குமிழ், மகாகனி போன்ற விலைமதிப்பு மிக்க டிம்பர் மரங்களை ரூ.3/-க்கு வழங்கி வருகிறது. இது போன்ற விலைமதிப்பு மிக்க டிம்பர் மரங்களை விவசாய நிலங்களில் நட்டு வளர்ப்பதன் மூலம் விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கும். அதுமட்டுமின்றி மரங்களுக்கிடையே ஊடுபயிர் செய்து அதன் மூலமும் வருமானமும் பெறலாம். மேலும் மரங்களுக்கிடையே நறுமணப் பயிர்களான ஜாதிக்காய் முதலான மரங்களையும் சாகுபடி செய்வதன் மூலம் கூடுதல் வருமானம் ஈட்டலாம்.

இதுமட்டுமின்றி காவேரி கூக்குரல் இயக்கம் விவசாயிகளுக்கு பயன் அளிக்கும் வகையில் உணவுக்காடு வளர்ப்பு, பழங்கள் மதிப்புக்கூட்டுதல், மசாலா மற்றும் நறுமணப்பயிர் சாகுபடி போன்ற பல்வேறு பயிற்சிகளை நடத்திவருகிறது. இதன் மூலம் விவசாயிகள் தொழில்நுட்ப அறிவையும், வருமானத்தை அதிகரிக்கும் வழிமுறைகளையும் கற்றுக்கொள்கின்றனர்.

வரும் டிசம்பர் 22 அன்று “மரங்களுக்கு இடையே விவசாயம்! மகத்தான வருமானம்!” என்ற சிறப்பு கருத்தரங்கத்தை காவேரி கூக்குரல் ஏற்பாடு செய்துள்ளது. இதில் விவசாயிகள் கலந்துகொண்டு டிம்பர் மரங்களுடன் ஊடுபயிர்களை சாகுபடி செய்யும் உத்திகள் குறித்து தெரிந்து கொள்ளலாம். மேலும் டிம்பர் மரக்கன்றுகளை பெறவும், பயிற்சிகளில் பங்கேற்கவும் 80009 80009 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

மனைவிக்கு அறிமுகமான நபர்.. கணவரும் சேர்ந்து செய்த செயல்.. சென்னையில் பரபரப்பு சம்பவம்!

சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…

12 hours ago

தோல்வியில் இருந்து உதித்து எழப்போகும் கங்குவா இயக்குனர்? அடுத்த படத்துக்கு ரெடி ஆகும் சிறுத்தை சிவா! அதுவும் இந்த நடிகர் கூட?

படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…

13 hours ago

2 மாதங்களாக கோவை சிறையில் விலகாத மர்மம்.. போலீசார் முக்கிய நகர்வின் பின்னணி!

கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…

13 hours ago

தனுஷிற்கு எதிராக அறிக்கை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்! மேலிடத்தில் இருந்த வந்த உத்தரவு? அதிர்ச்சியில் ரசிகர்கள்…

தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…

14 hours ago

Uff… அந்த இடுப்பு இருக்கே : படுகிளாமரில் கீர்த்தி சுரேஷ்!

Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…

14 hours ago

புதிய தமிழக பாஜக தலைவர்.. மூத்த பிரமுகர் கொடுத்த Hint.. பரபரக்கும் தலைமை!

ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…

14 hours ago

This website uses cookies.