Categories: தமிழகம்

பூட்டியிருக்கும் வீடுகளுக்கு மட்டுமே குறி…. பகலில் உலா வரும் கேடி பெண்கள் : பகீர் சம்பவம்!!

கோவை சிங்காநல்லூர் மசக்காளிபாளையம் பகுதியில் வசிப்பவர் சதாசிவம். ஆவின்பால் முகவரான இவர் கடந்த 22 ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு வழக்கம்போல் தனது பணிகளுக்காக வெளியே சென்றுள்ளார்.

அவரது மனைவி மற்றும் மகன்களும் வேலைக்கு செல்பவர்கள் என்பதால் கடைசியாக வீட்டில் இருந்து வெளியே சென்ற சதாசிவத்தின் மகன் வீட்டை பூட்டி வழக்கம்போல் வீட்டின் முன்புள்ள பெட்டியில் சாவியை வைத்துவிட்டு அவரும் வேலைக்கு சென்றுவிட்டார்.

இந்த நிலையில் சதாசிவம் மாலை 3 மணிக்கு வீட்டிற்கு வந்தவர் ஆவின் நிறுவனத்திற்கு கொடுப்பதற்கு வைத்திருந்த ரூ 5 ஆயிரம் பணத்தை எடுக்க பீரோவை திறந்துள்ளார்.

அப்போது அவர் வைத்த இடத்தில் பணம் இல்லாததால் வீட்டில் உள்ளவர்களிடம் கேட்டுள்ளார். யாரும் எடுக்கவில்லை என்றதும், பீரோவை சோதித்து பார்த்ததில் லாக்கரில் வைத்திருந்த 15 சவரன் தங்க நகைகள் மாயமானது தெரியவந்ததையடுத்து கோவை சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

சதாசிவத்தின் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலிசார் அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்துள்ளார்கள். அதில் பதிவான காட்சிகளை வைத்து குற்றவாளிகளை தேடிவந்த நிலையில் கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் திருச்சி பேருந்துகள் நிற்க்கும் இடத்தில் நின்று கொண்டிருந்த இரண்டு பெண்களை சந்தேகத்தின் பேரில் காவல் நிலையம் அழைத்து வந்து தனிதனியே விசாரித்ததில் இருவரும் முன்னுக்குபின் முரனான தகவல் அளித்துள்ளனர்.

மேலும் போலிசாரின் கிடுக்கிபிடி விசாரணையில் ஒருவர் பெயர் ரமணி, மற்றொருவர் வினையா என்பதும் தெரியவந்தது. மேலும் இவர்கள் மீது கரூர், காங்கேயம் உள்ளிட்ட இடங்களில் பல்வேறு குற்றவழக்குகள் இருப்பதும் தெரியவந்துள்ளது.

போலிசாரின் விசாரணையில் சதாசிவத்தின் வீட்டில் நகையை கொள்ளையடித்ததும், கொள்ளையடிப்பதற்க்காக தனியார் கால்டாக்ஸி மூலம் கோவை வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் சதாசிவத்தின் வீட்டில் ரமணி நகையை திருடியதும். திருடிய நகைகளை வினயா, ரமணி இருவரும் சரிபாதியாக பிரித்து எடுத்துள்ளனர். இதில் வினயா 14 கிராம் நகையை கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பிரபல நடைகடையில் தனது அடையாள அட்டையை காண்பித்து விற்றுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து நகைகடைகாரர்களிடம் விற்கப்பட்ட 14 கிராம் நகை உட்பட சதாசிவம் வீட்டில் திருட்டுபோன 15 சவரன் தங்க நகைகளையும் கைப்பற்றிய சிங்கநல்லூர் போலீசார் இருவரையும் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைத்தனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

உயிருக்கு போராடும் துள்ளுவதோ இளமை பட நடிகர்.. உதவி செய்வாரா தனுஷ்?

துள்ளுவதோ இளமை படம் மூலம் தான் நடிகர் தனுஷ் நடிகராக அறிமுகமானார். அந்த படத்தில் ஏராளமானோர் அறிமுக நடிகர்களாக இணைந்தனர்.…

12 minutes ago

திமுகவில் இருந்து என்ன பயன்? தவெகவுக்கு ஆதரவளிப்பதில் தவறில்லை.. முக்கிய சங்கம் திடுக் கருத்து!

தவெக தலைவர் விஜய் எங்களுக்கு ஆதரவளித்தால், நாங்கள் அவருக்கு ஆதரவாக நிற்பதில் எந்தத் தவறுமில்லை என 2013 ஆசிரியர் தகுதித்…

23 minutes ago

தேவையில்லாத கேள்வியை கேட்காதீங்க.. நிருபர்களிடம் இளையராஜா ஆவேசம்!

முதல்முறையாக சிம்பொனியை 36 நாட்களில் உருவாக்கி அதை லண்டனில் அரங்கேற்ற உள்ளார் இசைஞானி இளையராஜா. இது இந்திய நாட்டுக்கே பெருமையான…

45 minutes ago

8 மாத குழந்தைக்கு விஷம்.. தகாத உறவால் கொலைகாரனாக மாறிய தந்தை!

தென்காசி அருகே தனது 8 மாத பெண் குழந்தைக்கு விஷம் கொடுத்து கொல்ல முயன்ற தந்தையை போலீசார் கைது செய்து…

1 hour ago

ஒரே நைட்டுல ஹீரோயின் ஆன திரிஷா.. இதுதாங்க தலையெழுத்து!

நடிகை திரிஷா தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரமாகவும், 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து கதாநாயகியாகவும் வலம் வருகிறார். ரஜினி, கமல்,…

2 hours ago

சற்று தணிந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் இன்று (மார்ச் 6) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 45 ரூபாய் குறைந்து 8 ஆயிரத்து 20…

2 hours ago

This website uses cookies.