கரூரில், 3வது திருமணம் செய்த நபரால் கல்யாண ராணி ரேணுகா எவ்வாறு கைது செய்யப்பட்டார் என்பது குறித்து பார்க்கலாம்.
கரூர்: கரூர் மாவட்டம், புஞ்சைக்காளக்குறிச்சி என்னும் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (30). இவர் கொசுவலை நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், இவருக்கும், கோவை மாவட்டம், ராமநாதபுரத்தை சேர்ந்த ரேணுகா (36) என்பவருக்கும், கடந்த டிசம்பர் 12ஆம் தேதி கரூர் மண்மங்கலத்தில் உள்ள கோயிலில் திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்த நிலையில், ரேணுகாவுக்கு ஏற்கனவே புதுக்கோட்டையைச் சேர்ந்த மெய்யர் மற்றும் கோவையைச் சேர்ந்த லோகநாதன் ஆகியோருடன் திருமணம் நடந்திருப்பது ரமேஷுக்கு, அவரது செல்போன் அழைப்பு மூலம் தெரிய வந்துள்ளது. எனவே, இது குறித்து ரேணுகாவிடம் ரமேஷ் கேட்டுள்ளார்.
அப்போது ரேணுகா, நான் உன்னை விட்டுச் செல்ல வேண்டுமானால் 20 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 20 பவுன் நகை கேட்டு மிரட்டியுள்ளார். இதனையடுத்து, இது குறித்து கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ரமேஷ் புகார் அளித்துள்ளார். இதனை அறிந்த ரேணுகா, தப்பிச் செல்வதற்காக கரூர் பேரூந்து நிலையம் வந்துள்ளார்.
இந்த தகவல் அறிந்ததும் கரூர் அனைத்து மகளிர் போலீசார், பேருந்து நிலையத்துக்கு விரைந்து சென்று ரேணுகாவைக் கைது செய்து விசாரித்து உள்ளனர். அப்போது, ரேணுகாவின் முதல் கணவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளது தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, ரமேஷின் திருமணத்திற்கு ஏற்பாடு செய்த கோவையை சேர்ந்த தரகர்களான ஜெகநாதன், ரோஷினி மற்றும் பழனிக்குமார் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: நடிகர் சிவராஜ்குமார் எப்படி இருக்கிறார்…அமெரிக்காவில் இருந்து வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!
மேலும், இந்த இரு கணவர்களுக்கு இடையே 3 பேருடன் ரேணுகா உறவில் இருந்ததும் தெரியவந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், கணவர் 3 பேரை தவிர்த்து வேறு யாருடனும் ரேணுகாவுக்கு திருமணம் நடந்ததா, வரன் தேடும் இளைஞர்களைக் குறி வைத்து ஏமாற்றி பணம் பறிப்பதை வழக்கமாக கொண்டுள்ளாரா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சென்னையில், இன்று (மார்ச் 31) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 65 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 425…
நடிகை ஐஸ்வர்யா ராய் பல சர்ச்சைகளில் சிக்கினாலும், தான் உண்டு தன் வேலை உண்டு என எந்த விமர்சனத்துக்கு பதில்…
தாயுடன் உல்லாசமாக இருந்த நபரை கண்டம் துண்டமாக தாக்கி கொலை செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்துள்ளது. விருதுநகரில் உள்ள…
சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ இணையத்தில் லீக்காகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.…
மோகன்லால் - எம்புரான் பட சர்ச்சை மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால்,பிரித்விராஜ் இயக்கத்தில் நடித்துள்ள "எம்புரான்" திரைப்படம் சமீபத்தில்…
பிரம்மாண்ட விருந்து! தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா,தனது மனைவி ஜோதிகாவுடன் இணைந்து கோலிவுட்டின் நெருங்கிய பிரபலங்களுக்கு…
This website uses cookies.