திண்டுக்கல் : பழனியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கொடிகளை ஊன்றுவது தொடர்பாக கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர கமிட்டி சார்பில் புதியதாக கட்சி அலுவலகம் கட்டப்பட்டு திறப்புவிழா நடைபெறவுள்ளது.
பழனி படிப்பாறை காளியம்மன் கோயில் அருகே கட்டப்பட்டுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தை அக்கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கலந்துகொண்டு திறந்து வைக்கிறார்.
இதற்காக பழனி வரும் பாலகிருஷ்ணனை வரவேற்கும் விதமாக பழனி நகர் முழுவதும் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடிகள் ஊன்றப்பட்டுள்ளது.
இதன்படி பழனி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து கட்சி அலுவலகம் வரையிலான சாலையில் கொடிக்கம்பம் நடப்பட்டது.இதற்கு போலீசார் ஆட்சேபனை தெரிவித்து சாலையின் நடுவே ஊன்றவேண்டாம் என தடுத்தனர்.
இதனால் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் போலீசாருக்கும் இடையே பேருந்து நிலையம் முன்பு கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசார் கூறியதையும் மீறி கொடிக் கம்பம் நடப்பட்டதால் இருபதிற்கும் மேற்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.
நள்ளிரவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் போலீசாருக்கும் இடையே நடந்த இச்சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.