சேலத்தில் தனியார் பேருந்து ஒன்று ஆட்சாங்குட்டப்பட்டியில் இருந்து நகர பேருந்து நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்த போது அயோத்தியா பட்டணம் அருகே உள்ள சுக்கம்பட்டி என்ற பகுதியில் சென்ற போது இரு சக்கர வாகனங்கள் மீது மோதியது.
இதில், 2 இரு சக்கர வாகனங்களில் பயணித்த ஒரு சிறுவன் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது தொடர்பாக வீராணம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணையில், முன்பகுதியில் லாரி சென்றுள்ளது பின்னால் 2 இருசக்கர வாகனங்களில் குழந்தை உட்பட 5 பேர் பயணித்துள்ளனர்.
அப்போது பின்னால் வந்த தனியார் பேருந்து லாரி மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழந்தனர். இது மட்டுமல்லாமல் இரு சக்கர வாகனத்தில் பயணித்த ஒருவர் மற்றும் பேருந்தில் பயணித்த 10க்கும் மேற்பட்டோர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் விபத்தில் உயிரிழந்தவர்கள் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
முதற்கட்ட விசாரணையில் வேகத்தடை காரணமாக முன்னே சென்று கொண்டிருந்த லாரி மெதுவாக அந்த வேகத்தடையை கடக்க முயன்றுள்ளது. அப்போது லாரியின் பின்னால் 2 இருசக்கர வாகனங்கள் மெதுவாக வந்து கொண்டிருந்துள்ளது. இரு சக்கர வாகனத்திற்கு பின்னால் அதிவேகமாக வந்த தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து 2 இருசக்கர வாகனங்கள் மீது மோதியது.
மேலும் விபத்துக்கு காரணமான ஓட்டுநர் வீராணம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இரு சக்கர வாகனத்தில் பயணித்த பெண் ஒருவர் சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் சேலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.