சேலத்தில் தனியார் பேருந்து ஒன்று ஆட்சாங்குட்டப்பட்டியில் இருந்து நகர பேருந்து நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்த போது அயோத்தியா பட்டணம் அருகே உள்ள சுக்கம்பட்டி என்ற பகுதியில் சென்ற போது இரு சக்கர வாகனங்கள் மீது மோதியது.
இதில், 2 இரு சக்கர வாகனங்களில் பயணித்த ஒரு சிறுவன் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது தொடர்பாக வீராணம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணையில், முன்பகுதியில் லாரி சென்றுள்ளது பின்னால் 2 இருசக்கர வாகனங்களில் குழந்தை உட்பட 5 பேர் பயணித்துள்ளனர்.
அப்போது பின்னால் வந்த தனியார் பேருந்து லாரி மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழந்தனர். இது மட்டுமல்லாமல் இரு சக்கர வாகனத்தில் பயணித்த ஒருவர் மற்றும் பேருந்தில் பயணித்த 10க்கும் மேற்பட்டோர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் விபத்தில் உயிரிழந்தவர்கள் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
முதற்கட்ட விசாரணையில் வேகத்தடை காரணமாக முன்னே சென்று கொண்டிருந்த லாரி மெதுவாக அந்த வேகத்தடையை கடக்க முயன்றுள்ளது. அப்போது லாரியின் பின்னால் 2 இருசக்கர வாகனங்கள் மெதுவாக வந்து கொண்டிருந்துள்ளது. இரு சக்கர வாகனத்திற்கு பின்னால் அதிவேகமாக வந்த தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து 2 இருசக்கர வாகனங்கள் மீது மோதியது.
மேலும் விபத்துக்கு காரணமான ஓட்டுநர் வீராணம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இரு சக்கர வாகனத்தில் பயணித்த பெண் ஒருவர் சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் சேலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.