Categories: தமிழகம்

12 – 14 வயது சிறார்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கி வைத்த மேயர் : 28 நாட்களில் 2வது தவணை போட வேண்டும் என அறிவுறுத்தல்!!

கோவை : கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் செட்டிவீதி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் 12 வயது முதல் 14 வயது வரை உள்ள சிறார்களுக்கான கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமை மேயர் கல்பனா ஆனந்தகுமார் இன்று துவங்கி வைத்தார்.

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.80க்கு உட்பட்ட, டவுன்ஹால் செட்டிவீதி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் 12 வயது முதல் 14 வயது வரை உள்ள சிறார்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாமினை மேயர் கல்பனா ஆனந்தகுமார் இன்று துவங்கி வைத்தார்

இதனை தொடர்ந்து பொதுமக்களிடையே பேசிய அவர் கொரோனா தொற்றிலிருந்து தற்காத்து கொள்வதற்கு தடுப்பூசி மிகவும் அவசியமானதாகும். கோவை மாவட்டத்தில் கோவிட்-19 தடுப்பூசிகள் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகியன அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் வழங்கப்பட்டு வருகின்றது. அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகிறது.

இதுவரை, கோவை மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட 99.4 சதவீதம் மக்களுக்கு முதல் தவணை தடுப்பூசியும் 88.1 சதவீத மக்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், 15- 18 வயதிற்குட்பட்ட 1,31,066 சிறுவர்களுக்கு முதல் தவணை மற்றும் 1,02,683 சிறுவர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை தவணையாக மருத்துவப்பணியாளர்கள், முன்களப்பணியாளர்கள் மற்றம் 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு இரண்டாம் தவணை செலுத்தி 9 மாதங்கள் முடிவடைந்தவர்களுக்கு, முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இதுவரை 46,898 நபர்கள் பயனடைந்துள்ளனர். வாரம்தோறும் சனிக்கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. இதுவரை 24 முகாம்கள் நடைபெற்றுள்ளன. இதில் 17.84 இலட்சம் நபர்கள் பயனடைந்துள்ளனர்.

தற்போது 12வயது முதல், 14 வயதில் உள்ள சிறார்களுக்கு தடுப்பூசி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு பிரத்தியேகமாக கோர்பிவேக்ஸ் தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.

இதில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் 1,02,200, 12முதல் -14 வரையில் உள்ள சிறார்கள் பயனடைய உள்ளார்கள், இந்த தடுப்பூசி இன்று முதல வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியின் இரண்டாம் தவணை 28 நாட்கள் கழித்து வழங்கப்படவேண்டும். இதற்காக 1,04,100 டோஸ் தடுப்பூசிகள் அரசால் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ

தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…

2 days ago

சாதி, மதம் பார்த்து தலைவர்களை தேர்வு செய்யக்கூடாது : திருச்சி எம்பி துரை வைகோ பரபரப்பு பேச்சு!

மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…

2 days ago

இயக்குநர் பாலா பேச்சை கேட்டு ஏமாந்துட்டேன்.. சினிமாவில் இருந்து விலகுகிறேன் : இளம் நடிகர் ஆதங்கம்!

இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…

2 days ago

ராசி முக்கியம் பிகிலு? மூக்குத்தி அம்மன் 2 படத்தில் சுந்தர் சி பெயர் வந்ததுக்கு இப்படி ஒரு காரணமா?

சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…

2 days ago

தவெகவை விட பலத்தை காட்ட வேண்டும்… பரபரப்பை கிளப்பிய அதிமுக மூத்த தலைவர்!

திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…

2 days ago

என்ன இப்படி சண்டப்போட்டுக்குறாங்க- தக் லைஃப் படத்தில் இருந்து திடீரென லீக் ஆன காட்சி?

கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…

2 days ago

This website uses cookies.