கோவை : வேட்பாளர் அறிவிப்புக்கு முன்னதாகவே கோவையின் மேயர் என்ற கனவுடன் பிரச்சாரம் செய்த திமுக பெண் நிர்வாகிக்கு கட்சி நிர்வாகம் டாட்டா காட்டிய சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் திமுக-அதிமுக என்ற இரண்டு கட்சிகளும் போட்டி போட்டு தங்களது வேட்பாளர்களை அறிவித்துள்ளன. இதற்கு முன்னதாக, அதாவது, வேட்பாளர் அறிவிப்புக்கு முன்னதாகவே திமுகவை சேர்ந்த மீனா ஜெயக்குமாரை கோவை மேயர் பொறுப்பில் அமர வைக்க திமுக திட்டமிட்டதாக தகவல் பரவியது.
இதனால் திமுக உடன்பிறப்புக்கள் அவரை சூழ்ந்து கொண்டனர். மேலும், சீட் உறுதி என்பதால் நேரம் தாழ்த்தாமல் பிரச்சாரத்தைத் தொடங்க அறிவுறுத்தினர். அதன் பேரில், தனக்கு கோவை மாநகரில் 57 வது வார்டு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வேட்பாளர் அறிவிப்புக்கு முன்னதாகவே தான் கோவையின் வருங்கால மேயர் என்ற கனவுடன் வளம் வந்தார் மீனா ஜெயக்குமார்.
57 வது வார்டில் வீதி வீதியாக சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். இதனிடையே திமுக வேட்பாளர் பட்டியலில் மீனா ஜெயக்குமாருக்கு சீட் வழங்கப்படவில்லை. “பட்ட கஷ்டம் எல்லாம் வீணா போச்சே” என்று தற்போது தலையில் கையை வைத்து அமர்ந்திருக்கிறார்.
இதற்கிடையே திமுக மாவட்ட பொறுப்பாளர்களான மருதமலை சேனாதிபதியின் 22 வயது மகள் நிவேதாவிற்கு 97 வது வார்டு ஒதுக்கப்பட்டுள்ளது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் மனைவி இலக்குமி இளஞ்செல்விக்கு 52 வது வார்டு ஒதுக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் தங்கள் சார்பில் களமிறக்கும் பெண்களை கோவை மேயராக்க வேண்டும் என்று தீவிர பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கோவையில் உச்சக்கட்ட கோஷ்டி மோதலை திமுக சந்தித்து வரும் நேரத்தில் “வெற்றி பெற்றால் தானே மேயர் பதவியெல்லாம் கிடைக்கும்” என்று சிலாகித்துக் கொண்டிருக்கிறது அதிமுக வட்டம்.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.