கோவை: மாடு அறுவை மனைகளில் அரசு நிர்ணயித்த தொகையை விட பல மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது என கன்றுகுட்டியுடன் இறைச்சி விற்பனையாளர்கள் மனு அளித்துள்ளனர்.
கோவை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கோவை சத்தி சாலை மற்றும் செட்டிபாளையம் பகுதிகளில் மாடு அருவை மனைகள் செயல்பட்டு வருகின்றது.
இதில் காளை மாடு மற்றும் கன்றுகளை வெட்ட இறைச்சி விற்பனையாளர்கள் 10 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த அருவை மனைகளை ஏலம் எடுத்துள்ள அஸ்லம் அலி மற்றும் இப்ரஹீம் பாதுஷா ஆகிய இருவரும், மாட்டுக்கு 300 முதல் 500 ரூபாய் வரையிலும், கன்றுகுட்டிகளுக்கு 150 ரூபாய் வரை கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும், இதற்கு உரிய ரசீதுகளும் தருவதில்லை எனவும் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். மனு அளிக்க வந்த விற்பனையாளர்கள் இரண்டு காளை கன்றுகளையும் அழைத்து வந்தனர். அதன் கழுத்துகளில் கட்டணக்கொள்ளை என எழுதிய பதாகைகளையும் தொங்க விட்டபடி மனு அளிக்க வந்தனர்.
அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர்.இதையடுத்து இறைச்சி விற்பனையாளர்கள் புகார் தொடர்பாக ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
வெளியானது குட் பேட் அக்லி… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று உலகம்…
வேலூர் மாவட்டம் லத்தேரி அருகே உள்ள பட்டியூர் பகுதியில் இருக்கும் சென்னை டு பெங்களூர் ரயில்வே தண்டவாளத்தின் அருகே உள்ள…
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் இன்று காலை 11 மணியளவில் பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் செய்தியாளர்கள்…
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா வரதனூர் பஞ்சாயத்து செங்கோட்டை பாளையம் கிராமத்தில் இயங்கி வரும் சுவாமி சிப்பவாணந்த மெட்ரிகுலேஷன் பள்ளி…
ஜெயிலர் 2 படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் கோவை வந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இதையும் படியுங்க: விஜய் பட…
வெளியானது GBU ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளிவந்துள்ள நிலையில்…
This website uses cookies.