மேட்டுப்பாளையம் அருகே உயிருக்கு போராடும் பெண் காட்டு யானைக்கு மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட லிங்காபுரத்தில் முருகன் என்பவரின் விவசாய தோட்டத்தில் பெண் காட்டு யானை ஒன்று படுத்த நிலையில் அவதிப்பட்டு வந்தது தெரியவந்தது. உடனே இதுகுறித்து சிறுமுகை வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, மாவட்ட வன அலுவலரின் அறிவுறுத்தலின் பேரில், அரசு வன கால்நடை மருத்துவ அலுவலர் சுகுமார், சிறுமுகை உதவி கால்நடை மருத்துவர் தியாகராஜன், வனச்சரக அலுவலர் மனோஜ் மற்றும் வனப்பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த பொழுது, யானை எழுந்து நிற்க முடியாமல் படுத்திருப்பது தெரியவந்தது.
உடனே மருத்துவ குழுவினர் படுத்திருக்கும் பெண் யானைக்கு ஊட்டச்சத்து மருந்து மாத்திரைகளை அளித்தனர். மேலும், ஜேசிபி எந்திரத்தின் உதவியுடன் படுத்து இருக்கும் பெண் யானையை எழுந்து நிற்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஆனால் யானையால் சுயமாக நிற்க முடியவில்லை. இதனையடுத்து, மருத்துவ குழுவினர் யானைக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.