நெல்லை ; நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் ஆபத்து மிகுந்த மருத்துவ கழிவுகள் எடுக்கப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் நிலவுகிறது
நெல்லை பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் பகுதியில் அமைந்துள்ள அரசு பல்நோக்கு மருத்துவமனையில் உள்நோயாளி மற்றும் வெளி நோயாளிகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நாள்தோறும் சிகிச்சை பெற்று வரும் சூழ்நிலையில்,
இம்மருத்துவமனையின் வளாகத்தில் சுகாதாரமற்ற முறையில் மருத்துவ கழிவுகளை எரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், தொற்று நோய் பரவும் அபாயமும் உருவாகியுள்ளது. நெல்லையின் மாநகர் பகுதியில் அமைந்துள்ளது.
இந்த பல்நோக்கு மருத்துவமனையில் பலதரப்பட்ட நோய்களுக்கு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இங்கு தினம்தோறும் அகற்றப்படும் மருத்துவ கழிவுகளை சட்ட விதிகளுக்கு உட்பட்டு முறையாக அப்புறப்படுத்தாமல், பல்நோக்கு மருத்துவமனையின் வளாகத்திற்கு பின்புறம் திறந்த வெளியில் எரிக்கப்பட்டு வருகிறது. மருத்துவ கழிவுகளை அகற்றுவதற்கு என்று சில விதிமுறைகள் உள்ளது.
அதன்படி, அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட நிறுவனம் மருத்துவக் கழிவுகளை கிலோ 52 ரூபாய் வீதம் நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் உள்ள தனியார் கிடங்கில் வைத்து எரித்து அப்புறப்படுத்த வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால் தற்போது அந்த விதி மீறப்பட்டு அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே கழிவுகள் எரிக்கப்பட்டு வருவது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தொடர்ச்சியாக இதுபோன்று திருநெல்வேலி பகுதியில் மருத்துவக் கழிவுகள் ஆங்காங்கே கொட்டப்படுவதும் பொது இடத்தில் எரிக்கப்படுவதும் நிகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
நடக்குமா? நடக்காதா? தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பதாக இருக்கும் திரைப்படத்தை முதலில் கமல்ஹாசன் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் ஒரு…
கறாரான இயக்குனர் இயக்குனர் பாலா மிகவும் கறாரான இயக்குனர் எனவும் அவர் நடிகர்களை அடித்து வேலை வாங்குவார் எனவும் ஒரு…
தமிழ்நாட்டில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு வருடம் இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்திக்க இப்போதே…
கியூட் நடிகை நஸ்ரியா 90ஸ் கிட்களின் கியூட் நடிகையாக வலம் வந்தவர்.“நேரம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே இவர்…
உலக நாயகன் உலக நாயகனாக வலம் வந்த கமல்ஹாசன் இந்திய சினிமாவிற்கே ஒரு நடிப்பு பல்கலைக்கழகமாக திகழ்ந்தவர். 1980களில் சாக்லேட்…
ஆந்திர மாநிலம், சித்தூர் மசூதி மிட்டாவை சேர்ந்தவர் யாஸ்மின்பானு (23). பூதலப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சாய்தேஜ் (25). இவர்கள் இருவரும்…
This website uses cookies.