Categories: தமிழகம்

கூட்டுறவு வங்கியில் மெகா மோசடி.. டெபாசிட் தொகை கட்டினால் லோன் : விவசாயிகளுக்கு ‘அல்வா’ கொடுத்த அதிகாரிகள்!!

கரூர் : விவசாயிகளுக்கு தெரியாமலையே லோன் வாங்கி மோசடி ஒருபுறம் நடந்து வரும் நிலையில் விவசாயிகள் பெயரில் டெபாசிட் வாங்கியதற்கு எந்த வித ரசீதும் தராமல் மோசடி செய்த அதிகாரிகளின் சம்பவம் அம்பலமாகியுள்ளது.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, ராஜபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் ஒரு மெகா மோசடி ஒன்று தற்போது அம்பலமாகியுள்ளது.

கூட்டுறவு சங்கத்தலைவர் சுப்பராயன், உபதலைவர் இ.கே என்கின்ற இ.கிருஷ்ணன், செயலாளர் தங்கவேல் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து மோசடி செய்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

அது என்னவென்றால், கூட்டுறவு வங்கியில் வரவு செலவு வைத்திருக்கும் விவசாயிகளுக்கு ஒரு சிலர் லோன் வாங்காமலும், அவர்களது சிட்டா நகல் கொண்டு அந்த விவசாயிகள் 9 நபர்களுக்கு இவர்களே போலி கையெழுத்துக்கள் இட்டு சுமார் 8 லட்சத்து 87 ஆயிரம் ரூபாய் பண மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இது ஒரு புறம் இருக்க சுமார் 21 நபர்களிடமிருந்து டெபாசிட் தொகையாக சுமார் 3 லட்சத்து 42 ஆயிரம் வாங்கியுள்ளனர். லோன் வந்து விட்டது ஆகையால் முன் கூட்டியே டெபாசிட் தொகை செலுத்தினால் மட்டுமே லோன் கிடைக்கும் என்று கூறியும் டெபாசிட் தொகையினை வாங்கி விட்டு எந்த வித ரசீதும் இல்லாமல் அந்த விவசாயிகளை ஏமாற்றியுள்ளனர்.

இதனையடுத்து கரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் சுமார் 15 தினங்களுக்கு முன்னர் புகார் தெரிவிக்க, அவர்கள் மூலம், கரூர் மாவட்ட குற்றப்புலனாய்வுத்துறை போலீஸார் வழக்கு பதிவு செய்து கூட்டுறவு சங்க செயலாளர் தங்கவேல் என்பவரை கைது செய்துள்ளனர்.

கடந்த 15 தினங்களுக்கு முன்னர் ஆனால், கூட்டுறவு சங்கத்தலைவர் சுப்பராயன் மற்றும் உபதலைவர் இ.கே என்கின்ற இ.கிருஷ்ணன் என்பவர் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படும் நிலையில், 30 விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், அரசு மெத்தனம் காட்டி வருகின்றது என்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரண தொகையினை வழங்கி, இது போல எத்தனை நபர்களை ஏமாற்றியுள்ளனர் என்பதனையும் காவல்துறையும் கரூர் மாவட்ட நிர்வாகமும் கண்டு பிடித்து குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

திமுகவிடம் அடகு வைக்கப்பட்ட காங்கிரஸ்.. மூத்த தலைவர்களை விமர்சித்தால்.. தீவிரமடையும் உட்கட்சி விவகாரம்!

திமுகவிடம் காங்கிரஸை செல்வப்பெருந்தகை அடகு வைத்துவிட்டதாக மாணிக்கம் தாகூரின் ஆதரவாளர் கூறியுள்ளது உட்கட்சி விவகாரத்தில் தலைதூக்கியுள்ளது. சென்னை: “திமுகவின் ஆட்சி…

35 minutes ago

நிறைய நெருக்கடிகள்.. நாதகவில் இருந்து காளியம்மாள் விலகல்!

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக, அக்கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளராக இருந்த காளியம்மாள் அறிவித்துள்ளார். சென்னை: நாகப்பட்டினத்தைச்…

2 hours ago

பொழைக்க தெரிஞ்ச புள்ள… சோபிதாவை கொண்டாடும் நாகர்ஜூனா குடும்பம்!

சமந்தாவை பிரிந்த நாகசைதன்யா விவாகரத்துக்கு பிறகு சோபிதா துலிபாலாவை காதலிப்பதாக அறிவித்தார். இந்த காதலுக்கும் நாகர்ஜூனா குடும்பம் ஓகே சொன்னது.…

2 hours ago

மணிமேகலை போட்ட போஸ்ட்…யாருக்கு செருப்படி..குவியும் வாழ்த்துக்கள்.!

ஜீ தமிழில் அடியெடுத்து வைக்கும் மணிமேகலை சின்னத்திரையில் தன்னுடைய ஆங்கரிங் மூலம் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் மணிமேகலை,இவர் கடந்த…

2 hours ago

கன்னடம் – மராத்தி மோதல்.. கர்நாடகாவில் வெடித்த பூகம்பம்.. என்ன நடந்தது?

கர்நாடக பெல்காவி மாவட்டத்தில் உண்டான மோதலையடுத்து, கன்னடம் - மராத்தி மொழி மோதல் அம்மாநிலத்தில் ஏற்பட்டுள்ளது. பெங்களூரு: கர்நாடக மாநிலத்தின்…

2 hours ago

மீனாவுடன் மீண்டும் காதல்? கெட் டூ கெதரால் வந்த வினை!

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல முன்னணி நடிகர்களுடன் ஹீரோயினாக நடித்து கொடிகட்டிப் பறந்தவர் நடிகை மீனா. தமிழ், மலையாளம், கன்னடம்,…

2 hours ago

This website uses cookies.