பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடிப்பில் கடந்த மாதம் வெளியான ‘கேஜிஎஃப் 2’ வசூலில் ரூ.1000 கோடி ரூபாய்யை கடந்து உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.
தமிழகத்திலேயே முன்னணி நடிகர்களின் படங்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு ரூ.100 கோடி ரூபாய் வசூலைக் கடந்து ராக்கி பாயின் ராஜாங்கம் தொடர்ந்துகொண்டிருக்கிறது. அந்தளவிற்கு, ‘அவன் கத்தி வீசின வேகத்துல புயலே உருவாகிடுச்சி சார்’ என பில்டப் காட்சிகளால் தியேட்டரையே பிளிறிடவைத்தார் பிரஷாந்த் நீல். அதற்கு இணையாக, ‘அகிலம் நீ’, ‘மெகபூபா’ பாடல்களும் இதயத்தை இனிக்க வைத்தன.
கடந்த 8 ஆம் தேதி அன்னையர் தினத்தையொட்டி ‘அகிலம் நீ’ பாடல் வெளியான நிலையில், இன்று காதலர்களிடம் மெகாஹிட் அடித்த ‘மெகபூபா’ பாடல் வீடியோவை வெளியிட்டுள்ளது படக்குழு. நம்ம ராக்கி பாய்க்கு வயலன்ஸ் மட்டுமல்ல ரொமான்ஸும் வரும் என்பதை நிரூபித்தது ‘மெகபூபா’ பாடல். ‘பார்க்கப் பார்க்கத்தான் பிடிக்கும்’ என்பதுபோல், ‘மெகபூபா’வையும் கேட்க கேட்கத்தான் பிடித்திருந்தது. அதனால்தான். ஆடியோ வெளியானபோது சுமார் ஹிட் அடித்த பாடல், படம் வெளியானபிறகு சூப்பர் ஹிட் அடித்துது.
அதனை, உறுதிப்படுத்தும் விதமாக படம் வெளியாகி 1 மாதம் கழித்தே இன்ஸ்டா ரீல்ஸில் போட்டு ஃபீல் செய்துகொண்டிருக்கிறார்கள் காதலர்களும் ரசிகர்களும். அந்தளவிற்கு ஹிட் அடித்த ‘மெகபூபா’ பாடலை தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, இந்தி என ஐந்து மொழிகளில் வெளியிட்டுள்ளது படக்குழு.
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக, அக்கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளராக இருந்த காளியம்மாள் அறிவித்துள்ளார். சென்னை: நாகப்பட்டினத்தைச்…
சமந்தாவை பிரிந்த நாகசைதன்யா விவாகரத்துக்கு பிறகு சோபிதா துலிபாலாவை காதலிப்பதாக அறிவித்தார். இந்த காதலுக்கும் நாகர்ஜூனா குடும்பம் ஓகே சொன்னது.…
ஜீ தமிழில் அடியெடுத்து வைக்கும் மணிமேகலை சின்னத்திரையில் தன்னுடைய ஆங்கரிங் மூலம் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் மணிமேகலை,இவர் கடந்த…
கர்நாடக பெல்காவி மாவட்டத்தில் உண்டான மோதலையடுத்து, கன்னடம் - மராத்தி மொழி மோதல் அம்மாநிலத்தில் ஏற்பட்டுள்ளது. பெங்களூரு: கர்நாடக மாநிலத்தின்…
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல முன்னணி நடிகர்களுடன் ஹீரோயினாக நடித்து கொடிகட்டிப் பறந்தவர் நடிகை மீனா. தமிழ், மலையாளம், கன்னடம்,…
மிழ்நாடு முழுவதும் பெண் குழந்தைகளுக்கும். தாய்மார்களுக்கும், ஏன் காவல் பணியில் ஈடுபட்டிருக்கும் பெண்களுக்கும் கூட பாதுகாப்பற்ற நிலை உள்ளதாக எடப்பாடி…
This website uses cookies.