மெட்ரோ ரயில் திட்டப் பணியில் டாடாவுடன் கைகோர்த்த கோவை நிறுவனம் ; புதிய ஹைடெக் இந்தியாவை உருவாக்க வாய்ப்பு என பெருமிதம்

Author: Babu Lakshmanan
22 March 2024, 4:29 pm

மெட்ரோ ரயிலுக்கான உள்கட்டமைப்பு பணிகளுக்கான திட்டத்தில் டாடா நிறுவனத்துடன் சென்னையை சேர்ந்த பிரபல கட்டுமான நிறுவனம் கைகோர்த்துள்ளது.

உள்கட்டமைப்பு பணிகளின் முன்னணி நிறுவனமான KCP INFRA Limited நிறுவனம், டாடாவுடன் இணைந்து மெட்ரோ ரயிலுக்கான உள்கட்டமைப்பு மற்றும் கட்டுமான நடவடிக்கைளில் அடியெடுத்து வைக்க தயாராகியுள்ளது. புதிய ஹைடெக் இந்தியாவை நோக்கி நகர்வதற்கும், சிறந்த உள்கட்டமைப்பு பணிகளுடன் மக்களுக்கு சேவை செய்வதற்கும் இந்தப் பணிகள் ஒரு நல்ல வாய்ப்பாகும்.

இந்த வேலையை KCP Infra Limited மூலம் டி-வால்ஸ் என்று அழைக்கப்படும் டயாபிராம் சுவர்களை கட்டமைப்பது எங்களுக்கு சவால் மிகுந்த பணியாகும். டிரஞ்ச் கட்டர் போன்ற புதிய உயர் தொழில்நுட்ப இயந்திரங்களின் மூலம் மேற்கொள்ளப்படும் இந்தப் புதிய பணிகள், எங்களின் சிறந்த திட்டங்களில் ஒன்றாக அமையும். அதுமட்டுமில்லாமல், தங்கள் நிறுவனத்தின் திறனை நிரூபிப்பதன் மூலம், சிறந்த எதிர்காலத்தை உருவாக்க முடியும்.

இந்த புதிய திட்டப் பணிகள் குறித்து KCP INFRA Limited நிர்வாக இயக்குனர் திரு. K.ChandraPrakash கூறுகையில், “இந்த புதிய வேலையில் புதிய சவால்களுடன் கூடிய தொழில்நுட்ப இயந்திரங்கள் மற்றும் திட்டங்களுடன் பணியாற்றுவதற்கான வாய்ப்பை பெறவும், எங்களை தனித்துவமாக்குவதுடன், தரமாக பணிகளை செய்து முடிக்க எங்களால் முடிந்ததைச் செய்ய முயற்சிப்போம்.

மேலும், இந்த வேலை மிகவும் தொழில்நுட்பமானது மற்றும் வழக்கமான உள்கட்டமைப்பு வேலைகளில் இருந்து வேறுபட்டது. ஒவ்வொரு வேலைக்கும் அதன் சொந்த சவாலும் இயல்பும் உள்ளது, ஆனால் இந்த பணி புதிய வகையான தொழில்நுட்ப மற்றும் உள்கட்டமைப்பு துறையுடன் நம்மை இணைக்கிறது. எங்களின் நிறுவனம் மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கும் இது ஒரு சிறந்த வாய்ப்பு. எதிர்காலத்தில் புதிய மைல்கல்லை அடைய கடுமையாக உழைக்க வேண்டும்,” எனக் கூறினார்.

  • again ajith join with adhik ravichandran in ak 64AK 64- திரும்பவும் ஆதிக் ரவிச்சந்திரனோடயா? குட் பேட் அக்லி படத்தில் இடம்பெற்ற Hint!