மெட்ரோ ரயிலுக்கான உள்கட்டமைப்பு பணிகளுக்கான திட்டத்தில் டாடா நிறுவனத்துடன் சென்னையை சேர்ந்த பிரபல கட்டுமான நிறுவனம் கைகோர்த்துள்ளது.
உள்கட்டமைப்பு பணிகளின் முன்னணி நிறுவனமான KCP INFRA Limited நிறுவனம், டாடாவுடன் இணைந்து மெட்ரோ ரயிலுக்கான உள்கட்டமைப்பு மற்றும் கட்டுமான நடவடிக்கைளில் அடியெடுத்து வைக்க தயாராகியுள்ளது. புதிய ஹைடெக் இந்தியாவை நோக்கி நகர்வதற்கும், சிறந்த உள்கட்டமைப்பு பணிகளுடன் மக்களுக்கு சேவை செய்வதற்கும் இந்தப் பணிகள் ஒரு நல்ல வாய்ப்பாகும்.
இந்த வேலையை KCP Infra Limited மூலம் டி-வால்ஸ் என்று அழைக்கப்படும் டயாபிராம் சுவர்களை கட்டமைப்பது எங்களுக்கு சவால் மிகுந்த பணியாகும். டிரஞ்ச் கட்டர் போன்ற புதிய உயர் தொழில்நுட்ப இயந்திரங்களின் மூலம் மேற்கொள்ளப்படும் இந்தப் புதிய பணிகள், எங்களின் சிறந்த திட்டங்களில் ஒன்றாக அமையும். அதுமட்டுமில்லாமல், தங்கள் நிறுவனத்தின் திறனை நிரூபிப்பதன் மூலம், சிறந்த எதிர்காலத்தை உருவாக்க முடியும்.
இந்த புதிய திட்டப் பணிகள் குறித்து KCP INFRA Limited நிர்வாக இயக்குனர் திரு. K.ChandraPrakash கூறுகையில், “இந்த புதிய வேலையில் புதிய சவால்களுடன் கூடிய தொழில்நுட்ப இயந்திரங்கள் மற்றும் திட்டங்களுடன் பணியாற்றுவதற்கான வாய்ப்பை பெறவும், எங்களை தனித்துவமாக்குவதுடன், தரமாக பணிகளை செய்து முடிக்க எங்களால் முடிந்ததைச் செய்ய முயற்சிப்போம்.
மேலும், இந்த வேலை மிகவும் தொழில்நுட்பமானது மற்றும் வழக்கமான உள்கட்டமைப்பு வேலைகளில் இருந்து வேறுபட்டது. ஒவ்வொரு வேலைக்கும் அதன் சொந்த சவாலும் இயல்பும் உள்ளது, ஆனால் இந்த பணி புதிய வகையான தொழில்நுட்ப மற்றும் உள்கட்டமைப்பு துறையுடன் நம்மை இணைக்கிறது. எங்களின் நிறுவனம் மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கும் இது ஒரு சிறந்த வாய்ப்பு. எதிர்காலத்தில் புதிய மைல்கல்லை அடைய கடுமையாக உழைக்க வேண்டும்,” எனக் கூறினார்.
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
2026ல் ஆட்சியைப் பிடிப்பது என்ற நடிகர் விஜயின் பேச்சு போல பாஜகவும் பகல் கனவு காண்கிறது என அதிமுக முன்னாள்…
சினிமாவில் திருமணமான நடிகருடன் நெருக்கமாக இருப்பது, பின்னர் காதலிப்பது கல்யாணம் வரை சென்று பிரிவது என ஏராளமான விஷயங்கள் நடப்பது…
சீமான் மீது அளித்த புகாரின் மீது இனி எந்தப் போராட்டம் நடத்தப்போவதில்லை என நடிகை விஜயலட்சுமி தான் வெளியிட்ட வீடியோ…
நடிகை மீனாட்சி செளத்ரியை மாநில பெண்கள் அதிகாரமளித்தல் பிராண்ட் அம்பாசிடராக ஆந்திர அரசு நியமித்ததாக வரும் தகவலில் உண்மையில்லை என…
This website uses cookies.