தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு மேட்டூத் அணையில் கிடைக்கும் மீன்களை வைத்து விருந்து வைக்க பாமக எம்எல்ஏ சதாசிவம் விரும்பினார்.
இதற்காக மேட்டூர் அணையில் இருந்து ஒரு டன் மீன்களை சென்னைக்கு கொண்டு வந்த எம்எல்ஏ, காவிரி ஆற்றுப்படுகையில் விளையும் புழுங்கல் அரிசியை கொண்டு, சேலத்தில் பிரபலமான சமையல் கலைஞர்களை அழைத்து வந்தார்.
சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள சமூக நல கூடத்தில் அரிசி சாதம், மீன் குழம்பு, மீன் வறுவல், மீன் ரசம், முட்டை ஆகிய உணவுகள் சமைத்து விருந்து தயாரித்துள்ளார்.
அவை மிக நேர்த்தியான பாக்ஸ்களில் பார்சல் செய்யப்பட்டு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அவர்களின் உதவியாளர்கள் உள்ளிட்ட 500 நபர்களுக்கு அவர்கள் இருக்கும் இடத்திற்கே அனுப்பி வைத்தார் சதாசிவம்.
மீன் உணவை ரசித்தும் ருசித்தும் சாப்பிட்டவர்கள், மேட்டூர் அணையின் மீன்களுக்கு தனி ருசிதான் என்று சதாசிவத்தை பாராட்டியுள்ளனர்.
இந்த உணவு தயாரிப்பதற்கு 5 லட்சம் ரூபாய் செலவாகியுள்ளது. கடந்த 2006 ஆம் ஆண்டு திமுக ஆட்சியின் போது அப்போது மேட்டூர் எம்எல்ஏவாக இருந்த ஜிகே மணி இதே போல் மீன் விருந்து கொடுத்துள்ளார். அதே பாணியை தற்போது எம்எல்ஏ சதாசிவம் கடைபிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…
பிசியான நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது “பராசக்தி”, “மதராஸி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.…
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி விவகாரம் தொடர்பாக, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மோதல் தொடர்பாக,…
திருப்புமுனை அமையாத நடிகர் மணிரத்னம் இயக்கிய “கடல்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடையவில்லை…
மணிரத்னம்-கமல் கூட்டணி “நாயகன்” திரைப்படத்தை தொடர்ந்து 37 வருடங்கள் கழித்து மணிரத்னமும் கமல்ஹாசனும் இணைந்துள்ள திரைப்படம் “தக் லைஃப்”. இதில்…
உத்தரபிரதேசம் அலிகார் மட்ராக் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தனர். இறுதியில் நல்ல சம்பந்தம் கிடைததது. இருவருக்கு வரும்…
This website uses cookies.