திருவள்ளூரில் அரசு உதவி பெறும் பள்ளியின் மாணவர்கள் மினி வேனின் பின்பக்கத்தில் ஏறி தொங்கியபடி ஆபத்தான நிலையில் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
திருவள்ளூர் நேதாஜி சாலை துவங்கி சத்தியமூர்த்தி தெரு வடக்கு ராஜ வீதி வழியாக அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் மூன்று பேர் அவ்வழியாகச் சென்ற மினி வேனில் பின்பக்கம் ஏறி தொங்கியபடி, சாகசம் செய்தவாறு தங்களது பள்ளிக்குச் சென்றனர். போக்குவரத்து நெரிசல் மிக்க அந்தப் பகுதி என்பதால், மினி வேன் மெதுவாகச் சென்றது.
தொங்கியபடி சென்ற மாணவர்களின் இந்த செயலை கண்டு மற்ற வாகன ஓட்டிகள் மனம் பதைபதைத்தனர். அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் மாணவர்கள் படியில் பயணிப்பதை காவல்துறையினர் எச்சரித்து தடுத்து வரும் சூழலில், மூன்று அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் எதையும் பொருட்படுத்தாமல், மினி வேனில் ஆபத்தான முறையில் தொங்கியவாறு, பயணித்து பள்ளி கூட வாசல் வரை சென்று இறங்கியது பார்ப்பவர்களையும் பதைபதைக்க செய்தது.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.