தமிழகத்தில் ஒவ்வொரு கடற்கரை கிராமங்களிலும் கடல் ஆம்புலன்ஸ் திட்டத்தை நிறைவேற்ற தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வரும் பட்ஜெட்டில் அதற்குரிய நடவடிக்கையை மேற்கொள்வார் என்று மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழக மீன்வளத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இன்று கன்னியாகுமரி மாவட்டம் சுவாமிதோப்பு தலைமைப்பதில் சாமி தரிசனம் செய்தார். இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் அவரது பதவியை ராஜினாமா செய்து விட்டு, தூத்துக்குடியில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறாரே என செய்தியாளர்கள் கேட்டதற்கு, அது அவரவர்கள் தலையெழுத்து. அது அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.
ஒருவேளை தோல்வி அடைந்து விட்டால் துணை ஜனாதிபதி பதவி தருவார் என்று நினைத்திருக்க கூடும். அதுவும் நடக்காது, இந்திய கூட்டணி தான் மேலே ஆட்சி அமைக்கும். ராமேஸ்வரம் பகுதியில் மீனவர்கள் அடிக்கடி இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் ராமேஸ்வரம் பகுதிக்கு வரும் மத்திய பொறுப்பில் உள்ளவர்கள் ஒவ்வொரு முறை வரும்போதும் கச்சத்தீவை மீட்போம் என்று ஏமாற்று வேலைகளை செய்கின்றனர்.
தேர்தலில் வெற்றி பெற்று இந்தியா கூட்டணி ஆட்சியை அமைந்ததும் தமிழக முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசுடன் பேசி ஒரு மீனவர் கூட பாதிக்கப்படாமல் இருக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வார். கன்னியாகுமரி மாவட்டத்தில் காணாமல் போகும் மீனவர்களை கண்டுபிடிக்க ஹெலிகாப்டர் தளம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்தால்தான் முடியும். ஆனால் இது குறித்து அவர்கள் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
தமிழகத்தில் ஒவ்வொரு கடற்கரை கிராமங்களிலும் கடல் ஆம்புலன்ஸ் திட்டத்தை நிறைவேற்ற தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வரும் பட்ஜெட்டில் அதற்குரிய நடவடிக்கையை மேற்கொள்வார். மாநிலங்களில் இருந்து கொடுக்கும் வருவாயை தான் மத்திய அரசு திருப்பி வழங்குகிறது. அதற்காக அவர்கள் முதலாளியும் இல்லை, நாங்கள் தொழிலாளியும் இல்லை. எல்லாவற்றையும் நாங்கள் தான் செய்கிறோம் என்று கூறும் மத்திய அரசு, எய்ம்ஸ் மருத்துவமனையை கட்ட வேண்டியதுதானே. அதை ஏன் இன்னும் செய்யவில்லை? இவ்வாறு அவர் கூறினார்
பல சர்சைகளில் சிக்கினாலும் நடிகர் தனுஷ், தானுண்டு தனது வேலையுண்டு என எந்த விமர்சனத்துக்கும் பதில் சொல்லாமல் கேரியரில் கவனம்…
கோலிவுட் வரலாற்றில் ஒரு அதிர்ச்சி சம்பவம் எம்.ஜி.ஆரும் எம்.ஆர்.ராதாவும் கோலிவுட்டின் முன்னணி நடிகர்களாக உலா வந்த காலம் அது. அந்த…
கடலூர், திட்டக்குடி அருகே விவசாய நிலத்தில் கள்ளநோட்டு அச்சிட்டு வந்ததாக விசிக நிர்வாகி உள்பட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.…
முரட்டு நடிகர் வீசிய காதல் வலையில் சிக்கித் தவித்த பிரபல நடிகை சினிமாவை விட்டே ஒதுங்கிய விஷயம் குறித்து பிரபலம்…
சென்னை மெரினா கடலில் பெற்றோரின் திடீர் பிரிவால் மகள்கள் விபரீத முடிவை எடுக்கச் சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை…
கலவையான விமர்சனம்… எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் கடந்த வாரம் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…
This website uses cookies.