வேலூர் : நரிக்குறவர் பட்டியலில் இருந்து குறவர் இன மக்களை நீக்கி, தனி பிரிவாக உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உறுதியளித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சஞ்சீவிராயபுரத்தில் பொதுமக்களிடம் மனுக்கள் பெறும் நிகழ்ச்சி திமுக விவசாய அணி மாவட்ட அமைப்பாளர் பூஞ்சோலை சீனிவாசன் ஏற்பாட்டில் நடைபெற்றது. இதில் திமுக பொதுசெயலாளரும், தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன், சட்டமன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன், நந்தகுமார், நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், ஒன்றிய குழுதலைவர் வேல்முருகன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பாபு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர்.
பின்னர் நிகழ்ச்சியில் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது :- குறவர் இன மக்கள் அதிகமாக வாழ்கின்றனர். அவர்களை நரிக்குறவர் பட்டியலில் சேர்த்துள்ளனர். அவர்களை தனியாக பிரிக்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர். அதுகுறித்து தமிழக முதல்வரிடம் பேசி நரிக்குறவர் பட்டியலில் இருந்து பிரித்து வழங்க ஏற்பாடு செய்யப்படும்.
பகுதி பொதுமக்கள் குடிநீர் பிரச்சணை சாலை பிரச்சனை காரிய மேடை, கழிவு நீர் கால்வாய்கள், தெருவிளக்குகள் வேண்டுமென ஐந்து கோரிக்கைகள் வைத்துள்ளனர். சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்படும், எனக் கூறினார்.
சன் பிக்சர்ஸ் சன் நெட்வொர்க்கின் ஒரு பகுதியான சன் பிக்சர்ஸ் பல பிரம்மாண்ட திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்து வருகிறது. சன்…
கவுண்ட்டர் மணி… கோலிவுட்டில் கவுண்ட்டர் வசனத்திற்கென்றே பெயர் போனவர் கவுண்டமணி. இவர் சினிமாவிற்குள் நுழைவதற்கு முன்பு நாடக நடிகராக பல…
விஜய் டிவியில் ஆன்கராக நுழைந்த பிரியங்கா தேஷ்பாண்டே, கொஞ்ச கொஞ்சமாக எல்லா நிகழ்ச்சிகளிலும் தன்னுடைய திறமையை காட்ட ஆரம்பித்தார். இதையும்…
தர்பூசணி குறித்து மக்கள் மத்தியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி தவறான கருத்துக்களை பரப்பியிருந்தார். தர்பூசணி பழத்தல் ரசாயணம் உள்ளது…
லோகேஷ் பட ஹீரோ லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்தை வைத்து இயக்கி வரும் “கூலி” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் இத்திரைப்படத்தின்…
கராத்தே பாபு “ஜீனி” என்ற திரைப்படத்தை தொடர்ந்து ரவி மோகன் தற்போது நடித்து வரும் திரைப்படம் “கராத்தே பாபு”. இத்திரைப்படத்தில்…
This website uses cookies.