அத்திக்கடவு – அவிநாசி திட்டம் மற்றும் சர்பங்கா திட்டம் நிறைவேற்ற தமிழக அரசு தகுதி நடவடிக்கை எடுத்து வருகிறது என மாநில நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே வள்ளிமலை, விண்ணம்பள்ளி, பொன்னை ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 448 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இன்று விலை இல்லா மாநில மிதிவண்டிகளை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வழங்கினார்.
அப்போது பேசிய அமைச்சர், காட்பாடி பகுதியில் கிராமப்புற மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு வள்ளி மலையில் அரசு கலைக் கல்லூரி துவக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு பல்வேறு திட்டங்களை காட்டிலும் கல்வித்துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. மாணவர்கள் இதனை பயன்படுத்திக் கொண்டு கல்வியில் முன்னேற்றம் அடைய வேண்டுமென அவர் கூறினார்.
பெண்கள் பயில்வதை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காகத்தான் தமிழக அரசு கல்லூரி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்து செயல்படுத்தி வருவதாக அமைச்சர் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- அத்திக்கடவு – அவிநாசி திட்டம் மற்றும் சர்பங்கா திட்டம் நிறைவேற்ற தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுத்து வருகிறது. முதற்கட்டமாக, நில ஆர்ஜிதம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் பணிகளை துவக்க தமிழக அரசு தேவையான நடவடிக்கை வருகிறது.
அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இந்த திட்டம் தொடர்பாக தெரிவித்துள்ள கருத்துக்கள் பொய்யான தகவல். அத்திக்கடவு – அவினாசி திட்டத்திற்கு கடந்த அதிமுக ஆட்சியில் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை, என அவர் கூறினார்.
குட் பேட் அக்லி டீசர் அப்டேட் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி…
75 வருடமாக கொள்கையைக் கொண்ட நீங்கள் என்ன மாற்றம் செய்தீர்கள்? என ஆளும் அரசுக்கு ஆதவ் அர்ஜுனா கேள்வி எழுப்பியுள்ளார்.…
சென்னையில், இன்று (பிப்.26) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 25 ரூபாய் குறைந்து 8 ஆயிரத்து 50 ரூபாய்க்கு…
தவெக இரண்டாம் ஆண்டு துவக்க விழா மாமல்லபுரம் அருகே பிரமாண்டமாக நடைபெற உள்ள நிலையில், விஜய் முக்கிய அறிவிப்புகளை வெளியிட…
முதல்வரே தமிழகத்தில் மூன்றாவது மொழி என்னவென்று முடிவெடுக்க முடியாது, பெற்றோர் ஆசிரியர் கழகம் தான் முடிவெடுக்கும் என அண்ணாமலை கூறியுள்ளார்.…
கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…
This website uses cookies.