திருவள்ளூர்: ஊத்துக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆதிதிராவிடர் தங்கும் விடுதியை தமிழக ஆதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டபோது விடுதியில் வார்டன் இல்லாததால் அமைச்சர் அதிருப்தி அடைந்தார்.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலையில் பள்ளியில் உள்ள மாணவர்கள் தங்கும் விடுதியை அதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழிசெல்வராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அங்கு மாணவர்களுக்கு உணவு செய்யப்படும் சமையல் அறையை ஆய்வு செய்தார். அப்போது மாணவர்களுக்கு பல நாட்கள் உணவு செய்யாமல் இருந்ததால் அந்த அறை இருண்ட குகை போல் காட்சி அளித்தது.
பின்னர் சமையலர் திருகுமரனை அழைத்து வார்டன் இருக்கிறாரா இல்லையா என்று கேட்டபோது முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகமடைந்த அமைச்சர் சமையலறை தனி அறையில் அழைத்து சென்று விசாரித்தார்.
பின்னர் வெளியே வந்த அமைச்சர் பேசும்போது, தவறு செய்யும் பட்சத்தில் யாராக இருந்தாலும் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். ஆய்வின் போது பேரூராட்சி தலைவர் அப்துல் ரஷீத் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தாலுகா கன்னிவாடி காவல் நிலையத்திற்குட்பட்ட கொடைக்கானலுக்கு செல்லக்கூடிய தருமத்துப்பட்டி - பன்றிமலை அமைதி சோலை அருகே…
5 கோடி நஷ்டஈடு அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் பல கிளாசிக் பாடல்கள் ஆங்காகே பின்னணியில் இடம்பெற்றிருந்தன.…
இன்று சட்டமன்றத்தில் நீட் தேர்வு கொண்டு வந்தது யார் என்பது குறித்து விவாதம் நடந்த போது, அதிமுக எம்எல்ஏ கோவிந்தசாமி,…
டாப் தொகுப்பாளினி விஜய் தொலைக்காட்சியில் கிட்டத்தட்ட 8 வருடங்களுக்கும் மேலாக பல்வேறு நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக வலம் வருபவர்தான் பிரியங்கா தேஷ்பாண்டே.…
நீட் தேர்வை தமிழ்நாட்டில் கொண்டு வந்தது யார் என்ற விவாதம் இன்று சட்டபேரவையில் திமுக - அதிமுக இடையே காரசார…
அஜித்தும் கார் ரேஸும் அஜித்குமார் சினிமாவுக்கு நடிக்க வந்ததற்கு காரணமே அதில் வரும் பணத்தை வைத்து கார் பந்தயத்தில் கலந்துகொள்வதற்குத்தான்…
This website uses cookies.