திருச்சி: திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
திராவிடர் கழகம் சார்பில் திருச்சி மரக்கடையில் நீட் தேர்வு எதிர்ப்பு, புதியக் கல்விக் கொள்கை எதிர்ப்பு மாநில உரிமை மீட்பு பொதுக் கூட்டம் மாவட்ட திராவிடர் கழக தலைவர் ஆரோக்கியராஜ்சாமி தலைமையில் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் திராவிட கழகத் தலைவர் கீ.வீரமணி அமைச்சர் கே.என்.நேரு, மகேஷ் பொய்யாமொழி, மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது, வக்பு போர்டு வாரிய தலைவர் அப்துல் ரகுமான் ஆகியோர் மத்திய அரசின் நீட் தேர்வு புதிய கல்விக் கொள்கை மாநில உரிமை எதிரான செயல்களை கண்டித்து உரையாற்றினர்.
இதில் பேசிய அமைச்சர் கே என் நேரு நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு நீட் தேர்வை குறித்து வெளிப்படுத்தும் போது இரண்டு நீதிபதிகள் நீட் தேர்வுக்கு எதிராக தீர்ப்பளித்தனர் ஒரு நீதிபதி ஆதரவாக தீர்ப்பளித்தார்.
அந்த நீதிபதியை பாஜகவினர் எடுத்துக்கொண்டு அவர் தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வை ஏற்படுத்தி தங்களுக்கு சாதகமாக நீட் தேர்வை கொண்டு வந்தனர் என கூறினார்.
தொடர்ந்து பேசிய திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, எம்ஜிஆர் அவர்களால் நுழைவுத்தேர்வு வந்தபோது 25 ஆண்டுகாலம் திராவிட கழகம், கலைஞரும் எதிர்த்துப் போராடினோம். அதன் பின்னர் கலைஞர் தனியாக சட்டம் கொண்டு வந்தார். மாநிலத்தில் அந்த சட்டம் இன்றும் உள்ளது குடியரசுத் தலைவர் அதில் கையெழுத்திட்டுள்ளார். இந்தப் போராட்டம் ஆட்சிக்கு எதிராக நீங்கள் செய்யவில்லை மக்களுக்கு எதிராக செய்கிறீர்கள்.
அந்த மக்கள்தான் திமுகவை தேர்ந்தெடுத்தார்கள் நாம் தான் அவர்களை தேர்ந்தெடுத்தோம். இது சட்டமன்றத்திற்கு விரோதம், மக்களுடைய உரிமைக்கு விரோதம், ஜனநாயகத்துக்கு விரோதம், அரசியல் சட்டத்துக்கு விரோதம் இந்த போக்கை நிறுத்திக் கொள்ளாவிட்டால் மீண்டும் ஒரு ஜல்லிக்கட்டு போராட்டம் போல யோசிக்க வேண்டிய நிலை வரும் என தெரிவித்தார்.
இந்த பொதுக்கூட்டத்தில் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், திமுக மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி திராவிடர் கழக பொதுச்செயலாளர் சந்திரசேகரன், தலைமைகழக சொற்பொழிவாளர் பெரியார் செல்வம், பொதுச் செயலாளர் ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் குணசேகரன்
உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…
This website uses cookies.