Categories: தமிழகம்

கம்பெடுத்தா சொல்லி அடிப்பேன் : சிலம்பம் சுற்றி அடிமுறை சிலம்பாட்ட போட்டியை துவக்கி வைத்த அமைச்சர் மனோ தங்கராஜ்!!

கன்னியாகுமரி : சிலம்பம் விளையாடி சிலம்பாட்ட வீரர்களை உற்சாகப்படுத்திய அமைச்சர் மனோதங்கராஜ் தமிழக அளவிலான அடிமுறை சிலம்பம் போட்டியை துவக்கி வைத்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அறிஞர் அண்ணா விளையாட்டரங்கில் தனியார் அமைப்பினர் நடத்திய தமிழக அளவிலான அடிமுறை சிலம்பம் போட்டியானது இன்று நடைபெற்றது.

இதனை தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் சிலம்பும் விளையாடி துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்காப்புக் கலைகள் உள்ளிட்ட பாரம்பரிய கலைகள் பின்தங்கிய நிலையில் உள்ளது.

இந்த தற்காப்பு கலைகள் முந்தைய காலகட்டத்தில் போர்க் கலையாக நிகழ்ந்து வந்தது .எனவே மறைந்து போன அனைத்து பாரம்பரிய கலைகள் மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக தமிழ் இணையக் கல்விக்கழகம் வாயிலாக 8 லட்சத்திற்கும் மேற்பட்ட தற்காப்புக் கலைகள் பாரம்பரிய மருத்துவம் குறித்த ஓலைச்சுவடிகள் ஏடுகள் ஆவணங்கள் போன்றவற்றை பாதுகாத்து அதனை இளைய தலைமுறையினர் கற்றுக்கொள்வதற்கான மின்னணு வாக்கு செய்யப்பட்டு பாரம்பரிய ஓலைச்சுவடிகளின் விபரங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளது.

மேலும் எனது தலைமையில் நமது கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்காப்பு கலைகளுக்கான கட்டமைப்பினை உருவாக்குகின்ற ஒரு கருத்துருவாக்கத்தை ஆலோசனைக் கூட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

விரைவில் அதற்கான விரிவான திட்டம் ஏற்படுத்தப்படும் என்பதையும் இந்த தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் தெரிவித்தார். சிலம்பாட்ட போட்டிகளை அமைச்சர் சிலம்பம் விளையாடி துவக்கி வைத்தது சிலம்பாட்ட வீரர்களையும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

மணிரத்னம்கிட்ட நான் அப்படி பண்ணிருக்கவே கூடாது, எல்லாம் என் தப்புதான்- மனம் நொந்துப்போன ஸ்ரீகாந்த்…

சரிவை கண்ட நடிகர் “ரோஜா கூட்டம்” திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டிற்கு அறிமுகமானவர் ஸ்ரீகாந்த். இவர் நடிக்க வந்த புதிதில் ஒரு…

25 minutes ago

பக்கத்து வீட்டு 13 வயது சிறுமியை கடத்தி வன்கொடுமை… தாலி கட்டி குடும்பம் நடத்திய இளைஞர்!

கோவை அடுத்து சூலூர் பகுதியில் உள்ள பஞ்சாலையில் மதுரையைச் சேர்ந்த தம்பதியினர் தொழிலாளர்களாக பணி புரிந்து வந்தனர். இவர்கள் தங்களது…

39 minutes ago

பிரசவத்துக்கு ஒரு நாள் தான் இருக்கு.. காதல் மனைவி கதற கதற துடி துடிக்க கொலை : ஷாக் சம்பவம்!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் நகரில் உள்ள மதுரவாடா பகுதியை சேர்ந்த ஞானேஸ்வர ராவ் , அனுஷா ஆகியோர் இரண்டு ஆண்டுகளுக்கு…

51 minutes ago

கயாடு மீது காதல்? படக்குழுவுக்கு அதிர்ச்சி கொடுத்த இசையமைப்பாளர்.. இதெல்லாம் தேவையா?

கயாடு லோஹர் ஒரே ஒரு படத்தால் படு பேமஸாகி வருகிறார். இவர் நடித்து அண்மையில் வெளியான டிராகன் படம் 100…

1 hour ago

செத்துப்போனவங்களை ஏன் பாட வைக்கனும்?-ஆதங்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ்!

ஹாரிஸ் மாமா 90ஸ் கிட்களால் ஹாரிஸ் மாமா என்று செல்லமாக அழைக்கப்படும் ஹாரிஸ் ஜெயராஜ், 2000களில் கோலிவுட்டின் இசை உலகில்…

1 hour ago

எனக்கு எதுக்கு ஆட்ட நாயகன் விருது? தோனி கைக்காட்டிய அந்த வீரர் யார் தெரியுமா?

ஐபிஎல் போட்டியில் நேற்று வெகு நாள் கழித்து சென்னை அணி வெற்றியை ருசிபார்த்தது. நேற்று சென்னை அணி லக்னோ அணியுடன்…

2 hours ago

This website uses cookies.