வணிக வரி மற்றும் பதிவுத்துறையில் மார்ச் மாதம் இறுதிக்குள் ஒன்றரை லட்சம் கோடி வருவாய் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- தமிழகத்தில் 576 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. ஆண்டொன்றுக்கு சராசரியாக 30 இலட்சம் ஆவணங்கள் பதிவுகள் நடைபெறுகிறது.
2021 – 2022 ஆம் ஆண்டில் 29,98,048 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு 13,913 கோடியே 65 இலட்ச ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் டிசம்பர் 27 வரை 25,38,984 ஆவணங்கள் பதியப்பட்டு 12,538 கோடியே 88 இலட்சம் ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் 3,000 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
வணிக வரித்துறையில் 9 மாதங்களில் கூடுதலாக 25,000 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. வணிக வரி மற்றும் பதிவுத்துறையில் இதுவரை 1 இலட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. மார்ச் இறுதிக்குள் ஒன்றரை இலட்சம் கோடி ரூபாய் வருவாய் ஈட்ட வேண்டும் எனும் இலக்கோடு வணிக வரி மற்றும் பதிவுத்துறை செயல்பட்டு வருகிறது, எனக் கூறினார்.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.