வணிக வரி மற்றும் பதிவுத்துறையில் மார்ச் மாதம் இறுதிக்குள் ஒன்றரை லட்சம் கோடி வருவாய் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- தமிழகத்தில் 576 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. ஆண்டொன்றுக்கு சராசரியாக 30 இலட்சம் ஆவணங்கள் பதிவுகள் நடைபெறுகிறது.
2021 – 2022 ஆம் ஆண்டில் 29,98,048 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு 13,913 கோடியே 65 இலட்ச ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் டிசம்பர் 27 வரை 25,38,984 ஆவணங்கள் பதியப்பட்டு 12,538 கோடியே 88 இலட்சம் ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் 3,000 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
வணிக வரித்துறையில் 9 மாதங்களில் கூடுதலாக 25,000 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. வணிக வரி மற்றும் பதிவுத்துறையில் இதுவரை 1 இலட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. மார்ச் இறுதிக்குள் ஒன்றரை இலட்சம் கோடி ரூபாய் வருவாய் ஈட்ட வேண்டும் எனும் இலக்கோடு வணிக வரி மற்றும் பதிவுத்துறை செயல்பட்டு வருகிறது, எனக் கூறினார்.
விடாமுயற்சியோடு போராடும் அஜித் நடிகர் அஜித் தற்போது சினிமாவை தாண்டி கார் பந்தயத்தில் தன்னுடைய அசாதாரண திறமையை வெளிப்படுத்தி வருகிறார்,அந்த…
கும்பமேளாவில் தமன்னா தமிழ் சினிமாவில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளிவந்த பையா திரைப்படத்தின் மூலம் பிரபலம் ஆனவர் நடிகை தமன்னா,இந்த…
அடுத்தடுத்து அப்டேட்டை வெளியிட ரெடி நடிகர் அஜித்தை வைத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள படம் குட் பேட் அக்லி. விடாமுயற்சி…
தமிழ், தெலுங்கு மொழி சினிமாக்களில் பரபரப்பாக நடித்து வரும் இளம் நடிகர் தற்போது உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையும் படியுங்க…
சந்தீப் கிஷனின் வேதனை தமிழ் சினிமாவில் கிடைக்கின்ற வாய்ப்புகளில் நடித்து வருபவர் நடிகர் சந்தீப் கிஷன்,இவர் முதன்முதலில் தமிழில் யாருடா…
தமிழ் சினிமாவுல சில படங்களுக்கு ரெண்டு கிளைமாக்ஸ் இருக்கு. என்னடா இது ரெண்டு கிளமாக்ஸானு ஆச்சரியப்படறீங்களா. ரசிகர்களுக்கு பிடிக்கல, தயாரிப்பாளர்களுக்கு…
This website uses cookies.