இனிவரும் காலங்களில் மதுரையில் மழை பெய்தால் எந்த பாதிப்பும் வராத அளவிற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.
மதுரை: மதுரையில் நேற்று (அக்.25) பிற்பகல் முதல் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் கண்மாய் பெருகி, குடியிருப்பு பகுதிகளுக்குள் வந்தது. இதன் காரணமாக பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் மூர்த்தி மற்றும் ஆட்சியரிடம் கள நிலவரம் குறித்து கேட்டறிந்தார். மேலும், தேவையான ஏற்பாடுகளைச் செய்து தரவும் அவர் அறிவுறுத்தினார்.
இதன்படி, பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் சங்கீதா, வருவாய் அலுவலர்கள் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மூர்த்தி, “மதுரை மாவட்டத்திலே பெய்த மழையின் காரணமாக ஏற்பட்டிருக்கக் கூடிய சேதங்களை உடனடியாக பார்வையிட முதலமைச்சர் ஸ்டாலின், உத்தரவு பிறப்பித்தார். நான் அதற்கு முன்னதாகவே மதுரை மாவட்ட ஆட்சியர் உடன் ஆய்வு மேற்கொண்டுள்ளோம்.
இப்போது பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் தண்ணீர் புகுந்துள்ளது. பந்தல்குடி கால்வாய் தண்ணீர் என்பது, வழக்கத்தை விட அதிகமாக வருவதன் காரணத்தால், அந்த தண்ணீர் வைகை ஆற்றில் செல்லும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக 3 டிரான்ஸ்பார்மர்களை அகற்றும் பணியும் நடைபெற இருக்கிறது. ஏற்கனவே பெய்த மழையின் காரணமாக, விவசாயத்திற்காக உள்ள கண்மாய்கள் முழுவதுமாக நிரம்பி, மறுகால் பாய்ந்து கொண்டிருக்கிறது.
எப்போதும் உள்ள நீர்வரத்து, கண்மாய் தண்ணீர் வரக்கூடிய தண்ணீர் அளவு அதிகமாக உள்ளதால், குடியிருப்பு பகுதியில் ஒரு சில இடங்களில் கால் பகுதியில் தண்ணீர் சென்றுள்ளது. காலைக்குள் தண்ணீர் அகற்றப்படும் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. கனமழை வந்தாலும் இனி தாக்குப் பிடிக்கும் அளவில் பணிகள் நடைபெற்று வருகிறது. செல்லூர், பந்தடி அல் அமீன் ஆகிய பகுதிகளில் ஆய்வுகள் நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க : கால் மணிநேரத்தில் மதுரையில் கொட்டித் தீர்த்த கனமழை.. வரலாற்று மழைப்பதிவு!
ஆனால், முன்னெச்சரிக்கையாக ஏற்கனவே பார்த்தாச்சு. எதிர்பார்த்த சேதாரம் இல்லை, பெரிய சேதாரம் இல்லை. ஆனாலும் கூட, இனிவரும் காலங்களில் மழை பெய்தால் எந்த பாதிப்பும் வராத அளவிற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.
டிரெண்டிங் நடிகை நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு தனது டிரான்ஸ்ஃபர்மேஷன் புகைப்படத்தை நேற்று வெளியிட்டிருந்த நிலையில் நேற்று முழுவதும் குஷ்பு இணையத்தில்…
ரசிகர்களுக்கான அஜித் படம் கடந்த 10 ஆம் தேதி அஜித்குமாரின் “குட் பேட் அக்லி” திரைப்படம் வெளிவந்த நிலையில் அஜித்…
தென் கைலாயம் என பக்தர்களால் போற்றப்படும் கோவை வெள்ளியங்கிரி சிவன் கோவிலுக்கு ஏழு மலையலை கடந்து சென்று சாமி தரிசனம்…
மதிமுக முதன்மை செயலாளர் பதவியில் இருந்து துரை வைகோ விலகியது அக்கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி எம்பியாக உள்ள…
விண்வெளி நாயகன் கமல்ஹாசன் சமீபத்தில் தனது உலக நாயகன் என்ற பட்டத்தை துறந்தாலும் விண்வெளி நாயகன் என்று அவரை இப்போது…
விசித்திரமான வித்தியாசமான கதைகள் பெரிய திரையில் நடப்பதுண்டு. ஆனால் அரைச்ச மாவையே அரைக்கும் சின்னத்திரையில் வித்தியாசமான கதைக்களத்துடன் சீரியல் உருவாகி…
This website uses cookies.