நெல் சாகுபடி பரப்பளவை குறைக்கும் திட்டம் தற்போது இல்லை என்றும், சிறுதானியங்களின் சாகுபடியை அதிகரிக்க வேண்டும் என்பதே தமிழக அரசின் நோக்கம் என வேளாண்மை மற்றும் உணவுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் பேட்டி.
தமிழக அரசின் விவசாய நிதிநிலை அறிக்கை தொடர்பாக விவசாயிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பள்ளிகல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி மற்றும் தஞ்சை, திருவாரூர், நாகை, அரியலூர், மாயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த விவசாய பிரதிநிதிகள் கலந்துகொண்டு, நிதிநிலை அறிக்கையில் என்னென்ன அம்சங்கள் இடம்பெற வேண்டுமென்று குறித்து ஆலோசிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வேளாண்மை மற்றும் உழவர்நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், இன்னும் நான்கு ஆண்டுகளில் பசுமை மாநிலமாக தமிழகம் உருவாக்கப்படும் என்று தெரிவித்த அவர், இயற்கை வேளாண்மைக்கு அதிக திட்டங்கள் வரும் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறும் என தெரிவித்தார்.
மேலும் நெல் சாகுபடி பரப்பளவை குறைக்கும் திட்டம் உள்ளதா என செய்தியாளர்கள் கேட்டதற்கு, நெல் சாகுபடி பரப்பளவை குறைக்கும் எண்ணம் அப்படி எதுவும் இல்லை, சிறு தானியங்களின் சாகுபடி அதிகரிக்க வேண்டும் என்றார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து அதிக போட்டிகளில் ஒரு முறைகூட டாஸ் வெல்லாத கேப்டன் என்ற பிரைன் லாராவின் மோசமான உலக…
ராஜ்ய சபா சீட் பெறுவது தொடர்பாக அதிமுக உடன் எந்த வருத்தமும் இல்லை என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா…
சுந்தர் சி - குஷ்பூ தம்பதியின் 25வது திருமண நாளை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம்…
அதிமுகவின் சாதனைகளை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் திண்ணைப் பிரச்சாரத்தை தீவிரப்படுத்த வேண்டும் என இபிஎஸ் அறிவுறுத்தியுள்ளார். சென்னை: அதிமுக மாவட்ட…
கடலூர் அருகே திருடச் சென்றபோது ஒருவர் உயிரிழந்ததற்கு காரணமாக இருந்ததாக அவரது நண்பர்கள் மூவர் உள்பட 4 பேர் கைது…
இந்தியா - நியூசிலாந்து சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்குப் பிறகு ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் கேன் வில்லியம்சன்…
This website uses cookies.