Categories: தமிழகம்

அமைச்சரின் பெயரை சொல்லி பணம் பறித்த ஆசாமி… செல்போன் எண்ணை வைத்து மடக்கிப்பிடித்த போலீஸ்.!!

புதுச்சேரி அமைச்சரின் பெயரை சொல்லி பணம் பறிக்க முயன்ற சென்னையை சேர்ந்தவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

புதுச்சேரி நகர பகுதியில் கடந்த சில நாட்களாக வர்த்தக நிறுவனங்களுக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. மறுமுனையில் பேசிய நபர் தான் அமைச்சர் லட்சுமி நாராயணன் பேசுகிறேன், போஸ்டர் அமைக்க இவ்வளவு தேவைப்படுகிறது, இப்பணத்தை இந்த வங்கி கணக்கிற்கு அனுப்பிவிடுங்கள் என கூறி வந்தார். சந்தேகமடைந்த வர்த்தக நிறுவன உரிமையாளர்கள் இது குறித்து அமைச்சர் லட்சுமி நாராயணனிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து, உடனடியாக அமைச்சர் லட்சுமிநாராயணன் முத்தியால்பேட்டையை சேர்ந்த தனது உதவியாளர் சீனிவாசன் மூலம் பெரியக்கடை போலீசில் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் கண்ணன், சப் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் தலைமையிலான போலீசார், அழைப்பு வந்த மொபைல் எண்ணை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் சென்னை தண்டையார்பேட்டை சேர்ந்த முகமது ரபிக் (51) என்ற நபர் தான் அமைச்சர் பெயரில் பணம் பறிக்க முயன்றது தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து அவரை சென்னை சென்று கைது செய்து, புதுச்சேரி அழைத்து வந்த போலீசார் கிடுக்கிபிடி விசாரணை நடத்தினர். தொடர் விசாரணையில் புதுச்சேரி அமைச்சரின் பெயரை சொல்லி பணம் பறிக்க முயன்றதை ஒப்புக்கொண்டார். கைது செய்யப்பட்ட முகமது ரபிக்கை நீதிபதி முன் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் பெரியக்கடை போலீசார் அடைத்தனர்.

மேலும் கைது செய்யப்பட்ட முகமது ரபிக், புது சிம்கார்டு வாங்கி, ட்ரூ காலரில் பிரபல அரசியல் வாதிகளின் பெயரை பதிவு செய்து, அவர்களை போன்று மொபைல்போனில் பேசி, பணம் பறிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார் என்பதும், கடந்த 2014 ஆண்டு முதல் இதுபோன்ற மோசடி செய்து பணம் பறிக்க முயன்றதாக, தமிழகத்தில் அவர் மீது எட்டு வழக்குகள் பதிவாகி உள்ளது. புதுச்சேரியில் முதல் முறையாக பணம் பறிக்க முயன்றபோதே முகமது ரபிக் சிக்கிவிட்டார். அமைச்சர் பெயரில் பணம் பறிக்க முயன்ற சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

Babu Lakshmanan

Babu Lakshmanan, is Sub Editor at Updatenews360.com. With a keen eye for detail and a commitment to journalistic integrity, Babu serves as the Sub Editor at Updatenews360.com. Bringing years of experience in the media industry, he specializes in refining news stories to ensure clarity, accuracy, and engagement. Babu's passion for unearthing the truth and presenting it in an accessible manner drives his daily editorial decisions. His background in journalism, coupled with a deep interest in social issues and technological advancements, contributes to his unique editorial perspective. Off the clock, Babu is an avid reader and a cultural enthusiast, constantly exploring new horizons that enrich his professional and personal life. His dedication to impactful journalism makes him a vital part of the Updatenews360 team, where he continues to uphold the standards of reliable and responsible news reporting.

Recent Posts

தனியார் விடுதியில் பெண்ணுடன் தங்கியிருந்த 6 பேர் அதிரடி கைது : வனத்துறை போட்ட ஸ்கெட்ச்!

கரூர் மாவட்ட வனத்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி, கரூர் சுங்ககேட் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் நேற்று இரவு,…

15 minutes ago

மதுபோதையில் இளைஞர்களுக்குள் தகராறு.. திடீரென துப்பாக்கியால் சுட்ட நண்பன் : அதிர்ந்து போன திருச்சி!

திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்து கேவி பேட்டை பகுதியில் சேர்ந்த பாண்டியன் என்பவர் நண்பர்களான வீரமணி, குட்டிஸ் ஆகியோருடன் மது…

30 minutes ago

AAA படத்துனால என்னைய யாரும் பார்க்க விரும்பல, ஆனா? -மனம் நெகிழ்ந்து பேசிய ஆதிக் ரவிச்சந்திரன்

நாளை ரிலீஸ் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ள…

33 minutes ago

கோவை மருதமலை கோவில் கும்பாபிஷேகத்தில் விதி மீறல்? நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ்!

கோவை அருள்மிகு மருதமலை முருகன் திருக்கோயிலில் அண்மையில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அளித்த உறுதிமொழியை மீறியதாகக்…

1 hour ago

பூமாதா, கோமாதா… படத்தில் பேசிய வசனத்தால் ட்ரோலுக்குள்ளாகும் தமன்னா…

தமன்னாவின் புதிய திரைப்படம்… 2022 ஆம் ஆண்டு தெலுங்கில் “ஓடெலா ரயில்வே ஸ்டேஷன்” என்று ஒரு திரைப்படம் வெளிவந்தது. இதில்…

2 hours ago

This website uses cookies.