பால் பொருட்கள் நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட கூடுதலாக விற்றால் கடும் நடவடிக்கை அமைச்சர் ஆவடி நாசர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆவினில் 10 புதிய பொருட்களை சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் நிறுவனத்தில் பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் விற்பனையை தொடங்கி வைத்தார்.
10.ஆவின் வெண்ணெய் முறுக்கு (Aavin Butter Murukku ) – 200 கிராம் – ரூ.80
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட 36 அறிவிப்புகளில் 20 அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், அறிவிப்புகளில் ஒன்றான புதிய பொருட்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றும், இதன் மூலம் மாதத்திற்கு 2 கோடி ரூபாய் லாபத்தை எதிர்பார்க்கிறோம், எனவும் கூறினார்.
மேலும், ஆவின் குடிநீருக்கு முதலமைச்சர் இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை என கூறிய அவர், இது குறித்து முதல்வர் அறிவிப்பார் என்றும், புதிய பொருட்கள் தயாரிப்பதன் மூலம் பால் கொள்முதல் அதிகரித்துள்ளதாகவும், நாளொன்றுக்கு 38 லட்சம் லிட்டரில் இருந்து 41 லட்சம் லிட்டராக அதிகரித்துள்ளது என்றும், பால் விலையை குறைத்ததன் மூலம் நாளொன்றுக்கு 85 லட்சம் நஷ்டம் ஏற்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், ஆயுத பூஜை இனிப்புகள் தயாரிக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும், விரைவில் தொடங்கி வைக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
தனியார் பால் விலை ஏற்றத்தின் மூலம் ஆவின் பால் விற்பனை நாளொன்றுக்கு 50 ஆயிரம் லிட்டர் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்ட அவர், பால் பாக்கெட்டுகளில் சினிமா விளம்பரம் உள்பட இதர விளம்பரங்கள் இடம் பெறுவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்றும், விரைவில் இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
பால் பொருட்கள் நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட கூடுதலாக விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார். இந்த நிகழ்ச்சியில் பால்வளத்துறை செயலாளர் கார்த்திக், மேலாண் இயக்குனர் சுப்பையா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்
உறவுகள் தான் முக்கியம் நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மகள் அனிதா விஜயகுமார்,சிறு வயதிலிருந்தே மருத்துவர் ஆக வேண்டும் என்பதில் உறுதியாக…
படத்தின் மீது அதிகரிக்கும் எதிர்ப்பு இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரிப்பில்,அறிமுக இயக்குநர் பாரதி இயக்கத்தில் உருவாகியுள்ள…
ரஜினியிடம் ஆசி வாங்கிய ஐசரி கணேஷ் 2020ஆம் ஆண்டு வெளியான ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் சுந்தர்.சி…
பின்னணி பாடகர்களான திப்பு மற்றும் ஹரிணியின் வாரிசுதான் சாய் அபயங்கர். இவர் ஆல்பங்களுக்கு இன்றைய கால இளசுகள் அடிமை. இவர்…
வீடு என்னுடைய பெயரில் இல்லை நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான துஷ்யந்த்,அவரது மனைவி அபிராமியுடன் இணைந்து ஈசன்…
5 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு தமிழ் மற்றும் கன்னட திரைப்பட நடிகையுமான சஞ்சனா கல்ராணி, 2020ஆம் ஆண்டு போதைப்பொருள் வழக்கில்…
This website uses cookies.