திருவள்ளூர் ; திருவள்ளூர் அருகே ராட்சத குழாயில் ஏற்பட்ட உடைப்பை, அமைச்சர் நாசர் தரையில் படுத்து ஆய்வு செய்த செயல் வைரலாகி வருகிறது.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட குடியிருப்புகளுக்கு ராட்சத குழாய் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. திடீரென ஏற்பட்ட உயர் அழுத்தம் காரணமாக ராட்சத குழாயில் அமைக்கப்பட்டிருந்த வால்வு-இன் உள் பகுதியில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் சாலையில் வழிந்தோடியது. இது குறித்து தகவல் அறிந்த பால்வளத்துறை அமைச்சர் நாசர் ராட்சத குழாயில் ஏற்பட்ட உடைப்பை நேரில் சென்று ஆய்வு செய்தார்.
அப்போது, ராட்சத வால்வு உடைப்பு ஏற்பட்ட இடத்தில் ஆய்வு செய்து கொண்டிருந்த அமைச்சர் நாசர், சற்றும் யோசிக்காமல் திடீரென ராட்சத வால்வு உடைந்ததை உறுதிசெய்யச் சாலையில் தரையோடு தரையாகப் படுத்து ஆய்வு செய்தார். வால்வு உடைந்து போனதை அமைச்சர் உறுதி செய்தார்.
ஆய்வின் போது அமைச்சர் திடீரென சாலையில் படுத்து ஆய்வு செய்த இந்தச் சம்பவம் பொதுமக்கள் இடையே மட்டுமின்றி குடிநீர் வாரிய அதிகாரிகள் மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.