கடலூர் அருகே அமைச்சர் பொன்முடி சென்ற கார் மோதிய விபத்தில் பைக்கில் சென்ற இளைஞர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடலூரில் தேரடி வீதியில் நடைபெற்ற திமுக ஆட்சியின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுகூட்டத்தில் அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டார். பின்னர், மீண்டும் நெல்லிக்குப்பம் வழியாக விழுப்புரம் சென்றபோது, அவருடைய கார் சாலையில் சென்ற பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் இருசக்கர வாகன ஒட்டி ஜோதி என்பவர் பலத்த காயமடைந்தார். இதையடுத்து, உடனடியாக பாதுகாப்பு காவல்துறையினர் விபத்தில் சிக்கியவரை மீட்டு காவல்துறை வாகனத்திலேயே தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், அமைச்சர் பொன்முடி விழுப்புரம் புறப்பட்டு சென்றார்.
தற்போது அவரது நிலைமை மோசமாக உள்ளதாக கூறப்படும் நிலையில், அமைச்சரின் கார் இளைஞரின் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.