கடலூர் அருகே அமைச்சர் பொன்முடி சென்ற கார் மோதிய விபத்தில் பைக்கில் சென்ற இளைஞர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடலூரில் தேரடி வீதியில் நடைபெற்ற திமுக ஆட்சியின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுகூட்டத்தில் அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டார். பின்னர், மீண்டும் நெல்லிக்குப்பம் வழியாக விழுப்புரம் சென்றபோது, அவருடைய கார் சாலையில் சென்ற பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் இருசக்கர வாகன ஒட்டி ஜோதி என்பவர் பலத்த காயமடைந்தார். இதையடுத்து, உடனடியாக பாதுகாப்பு காவல்துறையினர் விபத்தில் சிக்கியவரை மீட்டு காவல்துறை வாகனத்திலேயே தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், அமைச்சர் பொன்முடி விழுப்புரம் புறப்பட்டு சென்றார்.
தற்போது அவரது நிலைமை மோசமாக உள்ளதாக கூறப்படும் நிலையில், அமைச்சரின் கார் இளைஞரின் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
5 கோடி இழப்பீடு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடைபெறும் வக்பு திருத்தச்…
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காந்தி கலையரங்கத்தில் சட்ட மாமேதை அம்பேத்கரின் பிறந்த நாள் விழா, வக்ஃபு வாரிய சட்ட திருத்தம்…
வைகைப்புயல் மீது பிராது வைகைப்புயல் என்று அழைக்கப்படும் காமெடி நடிகர் வடிவேலு கோலிவுட்டின் டாப் காமெடி நடிகராக வலம் வந்த…
கரூர், பஞ்சமாதேவி பகுதியில் பொன்னுச்சாமி என்பவர் புதியதாக கட்டி வரும் வீட்டிற்கு சுற்றுச்சுவர் கட்டுவதற்காக சிவாஜி, ராஜேந்திரன், மாயவன் ஆகிய…
This website uses cookies.