அரசுப் பள்ளி மாணவர்களுடன் நடனமாடிய அமைச்சர் பொன்முடி.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!!!
தமிழகத்தின் மறைந்த முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நினைவாக மெரினா கடற்கரையில் பேனா சின்னம் மெரினா கடற்கரையில் அமைக்கபட உள்ளது. இதனையொட்டி மாதிரி நினைவு பேனா தமிழகம் முழுவதும் கொண்டு செல்லப்பட்டு வருகிற நிலையில் கலைஞர் நினைவு சின்னமான பேனா விழுப்புரம் மாவட்டத்திற்கு இன்று வருகை புரிந்தது.
விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பாக நிறுத்தப்பட்ட பேனா நினைவு சின்னத்தை அமைச்சர் பொன்முடி, எம் பி கெளதமசிகாமணி ஆட்சியர் பழனி, மற்றும் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் புகழேந்தி,லட்சுமணன் உள்ளிட்டோர் மலர்தூவி வரவேற்றனர்.
முத்தமிழ் தேர் என பெயரிடப்பட்டுள்ள பேனா சின்னத்தை அமைச்சர் பொன்முடி, கெளதமசிகாமணி சட்டமன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் பார்வையிட்டனர். அப்போது பேனா நினைவு சின்னத்தின் முன் பொதுமக்கள் செல்பி எடுத்து கொண்டனர்.
அதனை தொடர்ந்து அரசு பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அரசு பள்ளி மாணவிகளின் நடனத்தை கண்ட அமைச்சர் பொன்முடி மாணவிகளின் நடனம் முடிந்த பிறகு அவர்களுடன் மேடையிலையே உற்சாகமடைந்த பொன்முடி மாணவிகளுடன் உற்சாகமாக நடனமாடி மகிழ்ந்தார்.
அதனை தொடர்ந்து மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். அமைச்சர் பொன்முடி கலைஞரின் நினைவு பேனா சின்ன வரவேற்பில் மாணவிகளுடன் இணைந்து நடனமாடியது அனைவரின் மத்தியில் வரவேற்பினை பெற்றது.
நல்ல நண்பர்களாக வலம் வந்த தமிழ் சினிமா நட்சத்திரங்களான தனுஷ் மற்றும் நயன்தாரா இடையே தற்போது கோர்ட்டில் கேஸ் நடத்தும்…
தினம்தோறும் ஏதாவது ஒரு இடத்தில் பாரதிய ஜனதா கட்சி தொண்டன் கைது செய்யப்பட்டு கொண்டு இருக்கிறான் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.…
கயாடு போன் மீமை பார்த்து கலாய்த்த பிரதீப் ட்ராகன் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள கயாடு லோஹர் தனக்குத்தானே மீம்ஸ் போட்டுகொண்டுள்ளார்,இந்த…
ரசிகரின் கமெண்ட்க்கு ஜோதிகா பதிலடி நடிகர் சூர்யா கங்குவா பட தோல்விக்கு பிறகு தன்னுடைய அடுத்தடுத்து படங்களில் மிகவும் பிஸியாக…
நடிகர் சிவக்குமாரின் இளைய மகனும், சூர்யாவின் சகோதரருமான நடிகர் கார்த்திக்கு கடந்த ரெண்டு படங்கள் கடும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பான்…
திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட திமுக செயற்குழு, திமுக சார்பு அணிகளின் மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கூட்டம்…
This website uses cookies.