தமிழகம்

பொன்முடியின் கொச்சை பேச்சு.. ‘நாக்கு தவறி’ பேசியிருக்கலாம் : அமைச்சர் ரகுபதி ஆதரவு!

புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி தொடங்கப்பட்டது இதற்கான பூமி பூஜையை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் பிற்படுத்தப்பட்ட நலத்துறை அமைச்சர் மெய்ய நாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, இந்திய அரசியலிலே ஜனநாயகத்திற்கு கிடைத்துள்ள மிகப்பெரிய வெற்றி. ஆளுநருக்கு கால நிர்ணயம் மட்டுமே இருந்தது, ஒரு மாத கால அவகாசம் மட்டுமே மட்டுமே உள்ளது.

இதையும் படியுங்க: பெண்களை ரொம்ப கேவலமாக பேசக்கூடியவர்கள் அந்த ரெண்டு தலைவர்கள்தான் : ஜோதிமணி விமர்சனம்!

ஆளுநர் நினைத்தால் அவர் இதுவரைக்கும் ராஜினாமா செய்து இருக்கலாம், மத்திய அரசு நினைத்தால் அவரை திரும்ப அழைத்து இருக்கலாம், இனி அவர் பதவியில் இருந்தாலும் எங்கருக்கு கவலையில்லை ஏனென்றால் இனி சட்ட மசோதாவிற்கு காலம் தாழ்த்த முடியாது.

திமுகவின் மூத்த அமைச்சர்கள் வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு எந்த கருத்தையும் பேசுவதில்லை, பேசிக் கொண்டிருக்கும்போது நாக்கு தவறி சில வார்த்தைகளை கூறிவிடுகின்றனர், அதற்கு முதலமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார்,

மூத்த அமைச்சர்கள் குறித்து கருத்து கூற எனக்கு உரிமை இல்லை, பொன்முடி அமைச்சர் பதிவில் இருப்பது குறித்தும் அவரை நீக்குவது குறித்தும் முதலமைச்சர் தான் முடிவு எடுப்பார்.

அமித்ஷா சாணக்கியராக இருக்கலாம் ஆனால் தமிழக முதல்வர் அனைத்து ராஜதந்திரங்களையும் தெரிந்தவர் அமித்ஷாவால் தமிழகத்தில் எந்த விதமான தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது

திமுக கூட்டணியை விட்டு எந்த கட்சியும் போகாது. பாமக கூட்டணி குறித்த கேள்விக்கு அமைச்சர் ரகுபதி பதில் கூறுகையில், புதிய கட்சி சேர்க்கக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டால் கூட்டணி கட்சிகளில் கலந்து ஆலோசித்து அதன் பின்னர் அவர்களின் சம்மதத்தின் பேரில் திமுக கூட்டணிக்கு அவர்களை தமிழகம் முதல்வர் இணைத்துக் கொள்வார்.

காங்கிரஸ் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சியுடன் கொஞ்சிக் குலாவி வரும் முதலமைச்சர் முல்லைப் பெரியாறு மற்றும் மேகதாது அணை குறித்து எந்த விதமான பேச்சுவார்த்தையையும் முதல்வர் ஏன் நடத்தவில்லை என்று எடப்பாடி கூறியுள்ளது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் ரகுபதி, பாஜக உடன் கூட்டணியிலிருந்து கொண்டு நான்கு ஆண்டு காலம் அவர்களுடன் கொஞ்சி குலாவி அவர்கள் கூறுவதற்கெல்லாம் தலையாட்டி கொண்டிருந்த அதிமுக ஏன் அப்போது இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று நாங்கள் கேட்கலாம் அல்லவா

அமித்ஷா வருகை என்பது அவருடைய கட்சி விவகாரம் எங்களை பொறுத்தவரை நாங்கள் தெளிவாக உள்ளோம். எங்கள் கூட்டணி வலுவான கூட்டணி.

இவ்வளவு பிரச்சனைக்கு பிறகும் ஆளுநர் ஒன்று ராஜினாமா செய்திருக்க வேண்டும் இல்லை என்றால் மத்திய அரசு அவரை திரும்ப பெற்று இருக்க வேண்டும்

அவர் இருந்தாலும் சரி புதியவரை போட்டு ஆளாலும் சரி எங்களுக்கு கவலை இல்லை நாங்கள் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்கள் இனி காலதாமதம் இல்லாமல் உச்ச நீதிமன்ற தீர்ப்புப்படி ஒப்புதல் பெறப்படும்.

மத்திய அரசு தமிழகத்திற்கு நிதிய அள்ளிக் கொடுக்கவில்லை கிள்ளி தான் கொடுத்துள்ளது.கொடுத்ததை கூறும் அவர்கள் எவ்வளவு தமிழகத்திலிருந்து நிதியை பெற்றுள்ளார்கள் என்பது குறித்து தெளிவுபடுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

முதல் படமே ஏ.ஆர்.ரஹ்மான் மியூசிக்? ஆனா விதி வேலையை காட்டிருச்சு- புலம்பித் தள்ளிய ஸ்ரீகாந்த்

சாக்லேட் பாய் ஸ்ரீகாந்த் நடிக்க வந்த புதிதில் சாக்லேட் பாய் ஆக பல திரைப்படங்களில் வலம் வந்தார். ஆனால் ஒரு…

23 minutes ago

அமைச்சர் பதவியில் இருந்து பொன்முடி, செந்தில்பாலாஜி பதவிகளை பறிக்க வேண்டும் : திடீரென வந்த எதிர்ப்பு குரல்!

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த அரசம்பட்டியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட, அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., தம்பிதுரை செய்தியாளர்களுக்கு பேட்டி…

40 minutes ago

‘அந்த’ வீடியோக்களை வெளியிட்ட நடிகர்.. நல்லா இருந்த மனுஷனுக்கு என்னாச்சு? ஷாக் வீடியோ!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீட்டுக்கு போக வேண்டும் என கூறி வெளிநடப்பு செய்தவர் நடிகர் ஸ்ரீ. வழக்கு எண்…

2 hours ago

பிரபல கிரிக்கெட் வீரரின் பயோபிக்கை இயக்கும் பா.ரஞ்சித்? ஆச்சரிய தகவல்

புதுமை இயக்குனர் பா.ரஞ்சித் திரைப்படங்கள் வெளிவரும்போதெல்லாம் அதனுடன் சேர்ந்து பல சர்ச்சைகளும் கிளம்புவது வழக்கம். தமிழ் சினிமாவில் சமூக ஏற்றத்தாழ்வுகளையும்…

3 hours ago

டிராலி சூட்கேஸில் காதலி… பாய்ஸ் ஹாஸ்டலுக்குள் அழைத்து சென்ற காதலனின் விநோத முயற்சி : டுவிஸ்ட்!

தனது காதலியை பாய்ஸ் ஹாஸ்டலுக்குள் சூட்கேஸில் மறைத்து வைத்து அழைத்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹரியானா மாநிலம்…

4 hours ago

சூர்யா பட ஆடியோ வெளியீட்டில் கலந்துகொள்ளும் ரஜினிகாந்த்? மாஸ் ஆ இருக்கப்போகுது!

கார்த்திக் சுப்பராஜ்-சூர்யா கூட்டணி கார்த்திக் சுப்பராஜ் சூர்யாவை வைத்து இயக்கியுள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…

4 hours ago

This website uses cookies.