மீண்டும் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல், ஆளுநர் ஆர்என் ரவி இழுத்தடிக்க முயற்சிப்பதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை லயோலா கல்லூரியில் கணக்கீட்டு அறிவியலில் சர்வதேச மாநாட்டின் தொடக்க விழாவில் சட்டதுறை அமைச்சர் ரகுபதி பங்கேற்று சிறப்புரையாற்றினார். இவ்விழாவில் கல்லூரி முதல்வர் துறை சார்ந்த தலைவர் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
அப்போது, அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது :- கணினி அறிவியலின் சிறப்புகளையும், சட்டம் மற்றும் சிறை துறையில் கணினி அறிவியலின் பங்களிப்புகள் பற்றியும் மாணவர்களிடம் எடுத்துரைத்தேன். 11 மற்றும் 12 ம் வகுப்பு பாடத்திட்டத்தில் கணினி அறிவியல் இருக்கிறது. கணினி அறிவியல் அடிப்படையானது. கிராமத்தில் இருக்கக்கூடிய விவசாயி குறுஞ்செய்தியை பார்க்கிறார் என்றால், அது கணினி அறிவியலின் தொழில்நுட்ப வளர்ச்சி.
பத்து மசோதாக்களையும் மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பினோம். என்னென்ன காரணங்களுக்காக மசோதாவை திருப்பி அனுப்பினேன் என்று கூறினாரோ, அதற்குரிய தகுந்த விளக்கங்களையும் கூறி மசோதாவை நிறைவேற்றினோம். தற்பொழுது தான் ஒப்புதல் தர வேண்டும் என்ற கட்டாயத்தின் அடிப்படையிலே உள்துறை அமைச்சகத்தின் வாயிலாக குடியரசு தலைவருக்கு அனுப்பியுள்ளோம் என்று கூறியிருக்கிறார்.
தன்னிடம் இருக்கக்கூடிய அதிகாரம் பறிபோய் விடுமோ என்ற எண்ணம் ஏன் அவர்களுக்கு வருகிறது என்று தெரியவில்லை ? மாநில அரசுக்கு துணைவேந்தரை நியமிக்க கூட அதிகாரம் அளிக்கக்கூடாது என்பது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர், ஒரு குழுவை நியமிக்கிறோம். அதில் ஆளுநரின் பிரதிநிதியும் இருக்கிறார். அரசின் பிரதிநிதியும் இருக்கிறார். சிண்டிகேட்டின் பிரதிநிதியும் இருக்கிறார். அந்த தேடுதல் குழு தான் மூன்று பேரை பரிந்துரை செய்கிறது. அதில் ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும். அதை ஆளுநர் தேர்ந்தெடுப்பதற்கு பதிலாக மாநில அரசு தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கூறுவதில் என்ன தவறு இருக்கிறது. மக்கள் உரிமை பறிக்கப்படாமல் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக நாங்கள் இந்த மசோதாக்களை அனுப்பியிருக்கிறோம், எனக் கூறினார்.
மேலும், சட்டப்பேரவைச் செயலாளருக்கு நீட்டிப்பு வழங்கப்பட்டது விமர்சனத்திற்கு உள்ளானது என்ற கேள்விக்கு, அரசின் முடிவு விமர்சனங்களுக்கு பதில் அளிக்க முடியாது என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
நீலகிரியில், மகளை பாலியல் தொல்லை அளிப்பதற்கு தந்தைக்கு அனுமதித்ததாக தாய் உள்பட இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். நீலகிரி:…
வீட்டை ஜப்தி செய்ய ஐகோர்ட் உத்தரவு நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான துஷ்யந்த் தனது மனைவி அபிராமியுடன்…
நடிகை அளித்த பாலியல் புகார் தொடர்பான விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதை வரவேற்பதாக சீமான் கூறியுள்ளார். சென்னை:…
100 கோடியை தொட்ட டிராகன் கடந்த பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி ரிலீஸ் ஆன டிராகன் திரைப்படம் எதிர்பார்த்ததை…
விழுப்புரத்தில் டீயில் எலி மருந்து கலந்து கொடுத்து காதலனைக் கொல்ல முயன்ற காதலியை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். விழுப்புரம்:…
எங்களை விட்டுப் போகாதீர்கள் என எவ்வளவோ கேட்டோம், அவராகவே போனார் என ஓபிஎஸ்சை அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் விமர்சித்துள்ளார்.…
This website uses cookies.